• May 06 2024

ராதிகா இங்க தான் இருப்பா என்று சொன்ன கோபி- திடீரென செழியன் எடுத்த முடிவு- பாக்கியாவிடம் சத்தியம் வாங்கிய ஈஸ்வரி

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்க்கலாம் வாங்க.

அதாவது ரூமுக்குள் கோபியைக் கூட்டிக் கொண்டு போன ராதிகா நான் இந்த வீட்டில தான் இருப்பேன். இந்த வீட்டில இருந்து என்னை அனுப்பணும் என்று நினைச்சா தற்கொலை செஞ்சுப்பேன். என்னோட சாவுக்கு மொத்தக்குடும்பமும் தான் காரணம் என்று எழுதி வைச்சிட்டு தான் சாவேன் என்று மிரட்டுகின்றார்.


இதனால் கீழே வந்து கோபி அமைதியாக நிற்க எல்லோரும் ராதிகாவை கூட்டிட்டு நீ வெளியே போற தானே எனக் கேட்க அந்தநேரம் ராதிகா வந்து நான் எதுக்கு போகனும் இங்க தான் இருப்பேன் என்று கூற கோபியும் ராதிகா இனிமேல் இங்க தான் இருப்பா எனக் கூறுகின்றார். இதனால் பாக்கியா இந்த வீட்டை நீங்க வித்திட்டீங்க எங்களுக்கு பணம் தந்திட்டு இருக்கிறோம் அப்பிறம் எப்பிடி இந்த வீட்டில இருக்க முடிவும் எனக் கேட்கிறார்.

இருந்தாலும் கோபி வீட்டை இன்னும் யாருடைய பெயருக்கும் மாத்தல தானே என சொல்ல செழியன் வீட்டுக்கான மொத்த பணத்தையும் நானே கொடுத்திடுறேன். இப்பவே தாறேன். வீட்டை விட்டு போய்டுங்க எனச் சொல்ல கோபி இனிமேல் ராதிகாவும் நானும் இங்க தான் இருப்போம் எனச் சொல்கின்றார். இதனால் ஆத்திரமடைந்த எழில் கோபியை வெளியே இழுத்துச் செல்ல முற்பட்ட போது ராதிகா எழிலைத் திட்டுகின்றார்.


பின்னர் கோபியை மேலே கூட்டிக் கொண்டு செல்கின்றார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த பாக்கியா எனக்கு மனநிம்மதி வேணும் நான் இந்த வீட்டை விட்டு போறேன் என சொல்ல ஈஸ்வரி பாக்கியாவிடம் சத்தியம் வாங்குகின்றார். இந்த வீட்டை விட்டு நீ போகக் கூடாது எப்பவும் நீ மட்டும் தான் எங்களோட மருமகள் இவங்க தான் எங்களோட பேரப்பிள்ளைகள் என்று சொல்கின்றார்.

அத்தோடு ராதிகாவையும் கோபியையும் எப்பியாவது இந்த வீட்டை விட்டு அனுப்பியே ஆகனும் என்று எல்லோரும் யோசனையில் இருக்கின்றனர். இத்துடன் இந்த எப்பிஷோட் முடிவடைகின்றது.


Advertisement

Advertisement

Advertisement