• May 05 2024

ராதிகாவிடம் மன்னிப்பு கேட்கும் கோபி- கடைசியில் நடந்த சம்பவம் – இன்றைய எபிசோட் அப்டேட்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பின உச்சத்தில் செல்லும் சீரியல் என்றால் பாக்கியலட்சுமி தொடர் தான்.ஒரு குடும்ப தலைவி படும் கஸ்டத்தையும் எப்படி வாழ்க்ககையை நகர்த்தி செல்லுகின்றார் என்ற மையத்தையும் கொண்டு கதை நகர்ந்து செல்லுகின்றது.

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கப்போகின்றது என்பதை பார்ப்போம்…

கோபி ராதிகா வீட்டிற்குச் செல்ல மயூ அவரை உள்ளே வரவேற்று பேசிக்கொண்டிருக்கிறார். இந்த நேரத்தில் கிச்சனில் இருந்து வெளியே வந்த ராதிகா வெளியே போங்க கோபி உங்களுக்கு இங்கு என்ன வேலை இங்க எதுக்கு வந்தீங்க என கேட்க என்ன ராதிகா இப்படி எல்லாம் பேசுற என கேட்கிறார்.

மேலும் மயூ உள்ள போவென ராதிகா கொள்ள நான் இங்கே அங்கிள் கூடவே இருக்கேன் என மயூரா சொல்ல கோபப்பட்ட ராதிகா அவரை அடித்து உள்ளே அனுப்பி வைக்கிறார். எனினும் அதன் பின்னர் கோபி என்னாச்சு ராதிகா ஏன் இப்படி எல்லாம் நடந்துக்கிற என கேட்கிறார். நேத்து ஃப்ரெண்ட்ஸோட பார்ட்டி கொஞ்சம் சரக்கு அதிகமாகி விட்டது நான் ஏதாவது உளறி இருந்தா நீ அதை பெரிசா எடுத்துக்காதே என்ன மன்னிச்சிடு என்ன கேட்கிறார்.

ஆனால் ராதிகா எவ்வளவு பெரிய பொய் சொல்லி இருக்கீங்க டீச்சர் என்னோட பிரெண்ட்ன்னு தெரிஞ்சும் என்ன இப்படி ஏமாத்திட்டீங்க. டீச்சர் என்னை அவங்க சகோதரியாகவும் அத்தோடு அவங்க குடும்பமே என் குடும்பத்துல ஒருத்தரா பார்க்கிறாங்க, அப்படி இருக்கும்போது என்னையே அவங்களுக்கு துரோகம் பண்ண வச்சுட்டீங்களே. வெளியே போங்க கோபி எனத் திட்டுகிறார்.

ஒரு ரெண்டு நிமிஷம் என்ன பேச விடு என கோபி கேட்க நீங்க ஒன்னும் பேச வேண்டாம் வெளியே போங்க, இனிமே உங்களுக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை இதுவே நான் உங்களை பார்க்கிறது கடைசியாய் இருக்கணும். அத்தோடு தப்பி தவறி கூட உங்களை பார்க்க கூடாதென பேசுகிறார். பின்னர் கோபியில் கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளுகிறார்.

மேலும் இந்தப் பக்கம் பாக்கியா செல்வியிடம் கோபி சொன்ன விஷயங்களைப் பற்றி கூறி வருத்தப்படுகிறார். அதன் பின்னர் மனது கஷ்டமாக இருக்கிறது என ராதிகாவை பார்க்கச் செல்கிறார். ராதிகா ஆபிஸ் கால் பேசுவதற்காக ரூமுக்குள் இருக்க பாக்கிய வந்ததும் கதவை திறந்து உள்ளே கூப்பிடுகிறார் மயூரா. ஏன் டல்லா இருக்கே என கேட்க அம்மா அடிச்சுட்டாங்க என கூறுகிறார். பிறகு பாக்கியா மயூராவை சமாதானம் செய்கிறார்.

அதன் பின்னர் ராதிகா ரூமுக்குள் இருந்து வர ஏன் இப்படி பண்றீங்க நீங்க இப்படி பண்ணுறீங்க என்று நான் கொஞ்சம் கூட நினைத்துப் பார்க்காத என சொல்ல ராதிகா அதிர்ச்சி அடைகிறார். இதன் பிறகு வமயூவை எதுக்கு அடிச்சிங்க என கேட்டதும் தான் அவருக்கு மூச்சு வருகிறது. பிறகு மயூ மாடிக்கு சென்று விடுகிறார். பிறகு ராதிகா ஏன் டல்லா இருக்கீங்க எனக் கேட்க உங்களுக்கும் நீங்க கல்யாணம் பண்ணிக்க போறவருக்கும் ஏதாவது பிரச்சனையா என கேட்கிறார்.

இல்ல அவரும் என்னை ஏமாத்திட்டாரு, என்கிட்ட நிறைய பொய் சொல்லிட்டாரு, அவர் குடும்பத்தைப் பற்றி அவர் சொன்ன எல்லா விஷயமும் பொய் தான் என சொல்லி கண்கலங்க இதைக்கேட்ட பாக்கியா அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய பாக்கியலட்சுமி சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Advertisement

Advertisement

Advertisement