• Aug 02 2025

Good Night இயக்குநருக்கு ஷாக் கொடுத்த SK.! புஷ்கர் கதையை கேட்டதும் விநாயக்கிற்கு டாடா...

subiththira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் இளம் நடிகர்களில் ஒருவராகத் திகழ்பவர் சிவகார்த்திகேயன். காதல் முதல் ஆக்‌ஷன் வரை தனது நடிப்பால் எல்லா வகையான ரசிகர்களையும் கவரும் நடிகரான இவர், தற்போது தனது அடுத்த திரைப்படத் திட்டங்களை தீர்மானித்து வருகிறார். 


சமீபத்தில் 'குட் நைட்' திரைப்படத்தை இயக்கி பாராட்டுகளை பெற்ற விநாயக் சந்திரசேகரன், தனது அடுத்த படத்தை சிவகார்த்திகேயனை முன்னணி கதாநாயகனாகக் கொண்டு உருவாக்க திட்டமிட்டிருந்தார்.

இந்த திட்டத்தை 'Fashion Studios' நிறுவனத்தின் சுகன் தயாரிக்க இருந்தார். ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கிய நிலையில், தற்போது அந்த திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


படம் நிறுத்தப்பட்டதற்கான முக்கியமான காரணம், புஷ்கர் – காயத்ரி இருவரும் சிவகார்த்திகேயனுக்கு சொன்ன கதை தான். 'விக்ரம் வேதா' போன்ற சுவாரஸ்யமான கதை சொல்லல்களின் மாஸ்டராக காணப்பட்ட புஷ்கர்-காயத்ரி தம்பதியினர், தற்போது SK-க்கு ஒரு புதுமையான கதையை உருவாக்க திட்டமிட்டுள்ளனர்.

அந்த கதை சிவகார்த்திகேயனை மிகவும் ஈர்த்துவிட்டதால், அவர் உடனடியாக அந்தக் கதையை முதலில் நடிக்கவேண்டும் என்ற முடிவுக்கு வந்துள்ளார். இதில் சுவாரஸ்யமானது என்னவென்றால், இரண்டு படங்களையும் தயாரிப்பது ஒரே நிறுவனம் என்பது தான்.

Advertisement

Advertisement