• May 08 2024

ரஜினி ரசிகர்களுக்கு குட்நியூஸ்- jailor வெளியாகி இத்தனை நாட்களில் தமிழகத்தில் மட்டும் இத்தனை கோடி வசூல் செய்துள்ளதா?

stella / 8 months ago

Advertisement

Listen News!

இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான திரைப்படம் தான் ஜெயிலர். இப்படத்தில் நடிகர் ரஜினி அசத்தலான ஸ்டைல் மூலம் ரசிகர்களைக் கவர்ந்தார். இதில், மோகன்லால், ஜாக்கி ஷெராப், கன்னட நடிகர் சிவ ராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், தமன்னா, யோகி பாபு உள்ளிட்டோர் பலர் நடித்துள்ளனர்.

பான் இந்திய நடிகர்கள் இந்த படத்தில் நடித்துள்ளதால் நாடு முழுவதும் இந்த படம் ஹிட்டானது. நெல்சனின் கடந்த படம் நல்ல வரவேற்பை பெறாத நிலையில், அவர் மீது விஜய் ரசிகர்கள் கோபமாக இருந்தனர், இந்த நிலையில் ஜெயிலர் படம் ஹிட்டடித்தன் மூலம் நெல்சன் ஒரு கம்பேக் கொடுத்துள்ளார். 


படத்தில் மேலும் ஒரு மெருகு போல இசையில் பட்டைய கிளப்பியுள்ளார் அனிருத்.இப்படி பலரும் தங்களது பங்களிப்பால் ஜெயிலரை வெற்றி பெற வைத்துள்ளனர். இந்த நிலையில் ஜெயிலர் திரைப்படம் ஓடிடியில் எப்போது ரிலீசாகும், எந்த தளத்தில் என பலரும் ஆர்வமாக காத்து கொண்டிருக்கின்றனர்.

 உலகம் முழுவதும் ரூ. 525 கோடி வரை வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அண்மையில் வெளியிட்டுள்ளனர். தமிழகத்தில் இதுவரை ரூ. 170 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. வரும் நாட்களிலும் படத்தின் வசூல் அதிகரிக்கும் என்றும் ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement