• May 05 2024

உடம்பில் ஏற்பட்ட திடீர் காயம்... பொருட்படுத்தாமல் சூரி செய்த செயல்... அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தன்னுடைய கலக்கல் காமெடியின் வாயிலாக பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் சூரி. 'வெண்ணிலா கபடி குழு' படத்தில் பரோட்டா சூரியாக வந்து அசத்திய இவர் தன்னுடைய நடிப்பின் மூலம் இன்று நாயகனாக உயர்ந்திருக்கின்றார். 


அதாவது படங்களிலே பல முன்னணி நடிகர்களுக்கும் நண்பனாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகி இருக்கின்றார். அந்தவகையில் சூரி தற்போது வெற்றிமாறனின் இயக்கத்தில் 'விடுதலை' என்னும் படத்தில் நடித்து வருகிறார். 

இந்த படத்திற்கு 'பாகுபலி, அசுரன்' உள்ளிட்ட பல படங்களில் சண்டை காட்சிகளை அமைத்துக் கொடுத்த  பீட்டர் ஹெயின் என்பவர் ஒப்பந்தமாகியுள்ளார். அத்தோடு இளையராஜா இசையமைப்பில் இதில் நாயகியாக ஜிவி பிரகாஷின் சகோதரி பவானி ஸ்ரீ நடித்து வருகிறார். 


மேலும் இவர்களுடன் பிரகாஷ்ராஜ், ராஜூமேனன்  உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அதுமட்டுமல்லாது இந்த படத்தில் விஜய் சேதுபதி, கௌதம் வாசுதேவ் மேனன் உள்ளிட்டோர் சிறப்பு தோற்றத்தில் நடித்து அசத்தி இருக்கின்றனர். 

ஒரு முக்கியமான விடயம் என்னவெனில் உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தில் சூரி போலீஸ் கான்ஸ்டபிளாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக போஸ்டரை முன்னதாகவே படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.


நீண்ட காலமாக படப்பிடிப்பில் இருந்து வருகின்ற இந்த படத்திற்கான பெரும்பகுதியை  திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலையில் முடித்துள்ளனர் படக்குழுவினர்.

தற்போது இதன் படப்பிடிப்புகள் யாவும் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், தற்போது 'விடுதலை' படத்தின் நாயகன் குறித்த சூப்பர் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. 

அதாவது ஏற்கனவே இந்த படத்திற்காக கடுமையான பயிற்சியின் வாயிலாக சிக்ஸ்பேக் உள்ளிட்ட உடல் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ள சூரி, ஜாக்கிசான் அளவிற்கு பறந்து பறந்து சண்டை செய்த காட்சிகள் குறித்த செய்திகள் இணையத்தளத்தில் ஏற்கெனவே வெளியாகி இருந்தன. 


இந்நிலையில் அவ்வாறு அவர் சண்டை பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது எதிர்பாராத விதமாக விபத்திற்கு உள்ளாகியுள்ளார். இதனால் கை, கால்களிலும் மற்றும் தலையிலும் காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இருந்தும் இக்காயம் தொடர்பாக சற்றும் அசராத சூரி மருத்துவமனைக்கு சென்று திரும்பிய உடனேயே படப்பிடிப்பில் கலந்துகொண்டுள்ளார்.

இது படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டிருந்த புகைப்படத்தின் மூலமாக உறுதி ஆனது. அதில் சூரியின் கையில் கட்டுப் போடப்பட்டு இருக்கிறது.

இவ்வாறாக தனது நாயகன் இடத்தை தக்க வைத்துக்கொள்ள சூரி இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்து இருப்பது ரசிகர்கள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. 

மேலும் ரசிகர்கள் மட்டுமல்லாது அந்த இடத்தில் குழுமி இருந்த படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் அந்த காட்சியைக் கண்டு அதிர்ச்சி அடைந்து விட்டனர். அத்தோடு சூரியின் இந்த செயலுக்கு பலரும் பாராட்டுக்களையும் தெரிவித்து இருக்கின்றனர்.

இதனைத் தொடர்ந்து இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மென்மேலும் எதிர்பார்ப்புக்கள் அதிகரித்து இருள்கின்றன. அதுமட்டுமல்லாது படம் விரைவில் திரைக்கு வரும் எனவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement