• May 02 2024

அச்சு அசல் செந்திலைப் போலவே இருக்கும் மகன்... ஆச்சரியத்தில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட நகைச்சுவை ஜாம்பவான்களில் ஒருவராக திகழ்ந்து வந்தவர் நடிகர் செந்தில்.

ஆரம்பத்தில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த இவருக்கு 1983-ஆம் ஆண்டு வெளியான 'மலையூர் மம்பட்டியான்' என்ற படம் தான் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது.


எந்தக் கவலையில் இருந்தாலும் இவரின் நகைச்சுவையை பார்த்தால் உடனே அந்தத் துயரில் இருந்து வெளியே வந்து விடுவார்கள். அந்தளவிற்கு தன்னுடைய நடிப்பினால் பல ரசிகர்களை சிரிக்க வைத்தவர்.

அதுமட்டும்லாது இவரும் நடிகர் கவுண்டமணியும் இணைந்து நடத்திய பல நகைச்சுவை காட்சிகள் இன்றும் பலருடைய மனதில் நீங்காத இடத்தை பிடித்து இருக்கின்றன.


1984-ஆம் ஆண்டு கலைச்செல்வி என்ற பெண்ணைத் திருமணம் செய்து கொண்ட இவருக்கு மணிகண்ட பிரபு, ஹேமச்சந்திர பிரபு என இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில் தற்போது நடிகர் செந்தில் மகனின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்த வண்ணம் இருக்கின்றன.


அப்புகைப்படமானது அவருடைய மகனின் திருமணத்தில் எடுக்கப்பட்டது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் ஆச்சரியப்பட்டதோடு, அச்சு அசல் செந்திலைப் போலவே அவரது மகனும் இருக்கிறார் எனக் கூறி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement