• May 08 2024

சில்க் ஸ்மிதாவுடன் இரவு முழுவதும் சில்மிஷத்தில் ஈடுபட்ட பிரபல இயக்குநர்- துரோகத்தால் மனம் நொந்த அவரது மனைவி

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 1980 மற்றும் 1990களில் பிரபல இயக்குநராக வலம் வந்தவர் ஜெயதேவி. இயக்குநராக மட்டுமின்றி, நடிகை கதை ஆசிரியர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர். தமிழ் சினிமாவின் முதல் பெண் இயக்குநர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். மேடை நாடகக் கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கிய ஜெயதேவி இயக்குநராக ஆசைப்பட்டார்.


 பின்னர் தனது 20 வயதில் படங்களில் நடிக்க தொடங்கினார் ஜெயதேவி. 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஜெயதேவி, 15க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார். ஒளிப்பதிவாளர்கள் பிசி ஸ்ரீராம், வேலு பிரபாகரன் ஆகியோரை அறிமுகப்படுத்திய பெருமையும் ஜெயதேவியைதான் சேரும். நலம் நலமறிய ஆவல், விலாங்கு மீன், விலங்கு, பாசம் ஒரு வேஷம், பவர் ஆஃப் வுமன் ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார் ஜெயதேவி.பின்னர் தனது 20 வயதில் படங்களில் நடிக்க தொடங்கினார் ஜெயதேவி. 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள ஜெயதேவி, 15க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்துள்ளார். 


ஒளிப்பதிவாளர்கள் பிசி ஸ்ரீராம், வேலு பிரபாகரன் ஆகியோரை அறிமுகப்படுத்திய பெருமையும் ஜெயதேவியைதான் சேரும். நலம் நலமறிய ஆவல், விலாங்கு மீன், விலங்கு, பாசம் ஒரு வேஷம், பவர் ஆஃப் வுமன் ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார் ஜெயதேவி.தனது படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய வேலு பிரபாகரனும் ஜெயதேவியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஒளிப்பதிவாளராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான வேலுபிரபாகரன், 1989ஆம் ஆண்டு வெளியான நாளைய மனிதன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து சரியான ஜோடி, அதிசய மனிதன், புதிய ஆட்சி, அசுரன், ராஜாளி, கடவுள், சிவன், புரட்சிக்காரன், காதல் கதை, ஒரு இயக்குநரின் காதல் டைரி உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.


கடைசியாக வேலு பிரபாகரன் இயக்கிய படம் ஒரு இயக்குநரின காதல் டைரி. இயக்குநராக இருந்தப் போதும் பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றி வந்தார் வேலு பிரபாகரன். தொடர்ந்து படங்களில் நடித்தும் வருகிறார் வேலு பிரபாகரன். கடைசியாக அமலா பால் நடித்து தயாரித்து வெளியான கடாவர் படத்தில் நடித்துள்ளார் வேலு பிரபாகரன். இந்நிலையில் 2009ஆம் ஆண்டு அவர் இயக்கிய காதல் கதை படத்தில் நடித்த ஷிர்லே தாஸை தனது 60 வயதில் காதலித்து இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் வேலு பிரபாகரன்.


இந்நிலையில் வேலு பிரபாகரனின் முதல் மனைவியான ஜெயதேவி ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்துள்ளார். அதில் தனது கணவரான வேலு பிரபாகரன் தனக்கு செய்த துரோகம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அதாவது, பிக்பாக்கெட் படத்தில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய போது அந்தப் படத்தில் நடித்த சில்க் ஸ்மிதாவுடன் வேலு பிரபாகரனுக்கு நெருக்கம் ஏற்பட்டதாம். இதையடுத்து ஒரு நாள் சில்க் ஸ்மிதாவின் வீட்டிற்கு சென்றுள்ளார் வேலு பிரபாகரன். அப்போது பேசிக் கொண்டே இருந்ததில் நேரம் போனதே தெரியவில்லையாம்.

நள்ளிரவு ஆன பிறகு சாப்பிட ஏதாவது இருக்குமா என சில்க் ஸ்மிதாவிடம் கேட்டுள்ளார் வேலு பிரபாகரன். உடனே சில்க் ஸ்மிதா தனக்காக உப்மா செய்து கொடுத்தாராம். அப்போது உலகமே சில்க் ஸ்மிதாவின் காலில் விழுந்து கிடந்த போது, தன்னை கடவுள் ஆசிர்வதித்திருப்பதாக நினைத்துக் கொண்டாராம் வேலு பிரபாகரன். அதுமிட்டுமின்றி அந்த இரவு சில்க் ஸ்மிதாவுடன் ஒரு புனிதமான இரவாக கழிந்தது என்றும் காலையில் தனது மனைவி ஜெயதேவியின் முகத்தை பார்க்கவே தனக்கு கூச்சமாக இருந்ததாகவும் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார் வேலு பிரபாகரன்.


தனது கணவரான வேலு பிரபாகரன் பத்திரிக்கைக்கு கொடுத்த இந்த பேட்டி, நடிகை ஜெயதேவியை ரொம்பவே பாதித்ததாம். தனது காதல் கணவர் தனக்கு செய்த துரோகத்தை பெரும் மன வேதனையுடனும் வலியுடனும் அந்த பேட்டியில் கூறியுள்ளார் நடிகை ஜெயதேவி. ஜெயதேவி 1970களில் வெளியான இதய மலர், சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு, வாழ நினைத்தால் வாழலாம் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கடைசியாக வேலு பிரபாகரன் இயக்கத்தில் 1989 ஆம் ஆண்டு வெளியான சரியான ஜோடி என்ற படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement