• May 04 2024

பிங்க் நிற உடையில் ... பிரக்னன்சி போட்டோ ஷூட் நடத்திய நடிகை பூர்ணா! வைரலாகும் போட்டோஸ்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்த பூர்ணா... கடந்த ஆண்டு துபாய்யை சேர்ந்த தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

இவரின் திருமணம் துபாயில் மிகவும் பிரமாண்டமாக நடந்த நிலையில், கர்ப்பமான பின்பே தனக்கு திருமணம் ஆன தகவலை புகைப்படம் வெளியிட்டு அறிவித்தார்.

தன்னுடைய கர்ப்ப காலத்தை மிகவும் மகிழ்ச்சியாக அனுபவித்து வரும் பூர்ணா... அவ்வப்போது தன்னுடைய சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாக சில வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் கூட, இவருக்கு மிகவும் பிரமாண்டமாக வளைகாப்பு நிகழ்ச்சி நடந்து முடிந்தது. இதில் திரையுலகை சேர்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.

இந்நிலையில் நடிகை பூர்ணா தற்போது கர்ப்பமாக உள்ள நிலையில், இவரின் லேட்டஸ்ட் பிரக்னன்சி போட்டோ ஷூட் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இதை தொடர்ந்து, தற்போது நடிகை பூர்ணா அழகிய கவுன் அணிந்து பிரக்னன்சி போட்டோ ஷூட் நடத்தியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.

பூர்ணா தமிழில் கடந்த 2008 ஆம் ஆண்டு பரத் நடித்த 'முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு' என்கிற படத்தின் மூலம் அறிமுகமானவர், இதைத் தொடர்ந்து 'ஆடுபுலி', 'கந்தகோட்டை', 'தகராறு', 'காப்பான்', 'தலைவி' போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழில் அறிமுகமான புதிதில்... பார்ப்பதற்கு நடிகை அசீன் போலவே இருக்கிறார் என பல ரசிகர்கள் புகழ்ந்து தள்ளினர். ஆனால் ஏனோ அசீன் அளவிற்கு இவரால் திரையுலகத்தில் முன்னணி நடிகையாக ஜொலிக்க முடியாமல் போனது.

பெரிதாக எந்த ஒரு சர்ச்சைகளில் சிக்காமல் நடித்து வந்த பூர்ணா, பட வாய்ப்புகள் குறைய துவங்கியதும் துபாயை சேர்ந்த தொழிலதிபர் ஆசிஃப் அலி என்பவரை திருமணம் செய்து கொண்டு தற்போது குழந்தை பெறவும் தயாராகி விட்டார்.

 


Advertisement

Advertisement

Advertisement