விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.
பிக் பாஸ் சீசன் 7 தொடங்கிய நிகழ்ச்சியில் முதல் வாரம் அனன்யா வெளியேறினார். அனன்யா வெளியேறிய மறுநாளே எழுத்தாளர் பவா செல்லத்துரை தானாக விரும்பி வெளியேறினார்.இதைத் தொடர்ந்து மூன்றாவது வாரம் விஜய் வர்மா வெளியேற்றப்பட்டார்.
இவ்வாறு பிக் பாஸ் வீட்டில் இருந்த பதினெட்டு பேரில் மூன்று பேர் வெளியேற, தொடர்ந்து 15 போட்டியாளர்கள் காணப்பட்டனர். இப்போது வைல்டு கார்டு மூலம் மேலும் 5 போட்டியாளர்கள் நிகழ்ச்சிக்குள் செல்லவிருப்பதாக புரோமோ வெளியானது.
தற்போதுள்ள பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் கன்டென்ட் தராமல் விளையாடுவதால் பிக் பாஸ் வரலாற்றில் முதல் முறையாக அதிக எண்ணிக்கையில் வைல்டு கார்டு மூலம் போட்டியாளர்களை இறக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இம்முறை குறைந்த வாக்குகளுடன் கூல் சுரேஷ், விஷ்ணு, மாயா, விக்ரம், அக்ஷயா ஆகியோர் உள்ளனர். அதே நேரம் டேஞ்சர் சோனில் வினுஷா, யுகேந்திரன் ஆகிய இரு போட்டியாளர்கள் காணப்படுவதோடு, அவர்களே பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பிக் பாஸ் வீட்டிலிருந்த போட்டியாளர்களில் இருவர் வெளியேற பதிமூன்று பேர் மிச்சமிருந்த சூழலில், தற்போது வைல்டு கார்டு என்ட்ரி மூலம் 5 பேர் உள்ளே செல்கின்றனர். அதன்படிஇ தற்போது, மீண்டும் 18 போட்டியாளர்கள் என்ற அளவிலேயே பிக்பாஸ் வீட்டில் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Listen News!