• May 02 2024

இந்தத் தவறை மட்டும் யாரும் செய்திடாதீங்க- இளம் நடிகைகளுக்கு பாரதி கண்ணம்மா சீரியல் நடிகை கொடுத்த அட்வைஸ்ட்

stella / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 2002 ஆம் ஆண்டு முரளி மற்றும் வடிவேலு நடிப்பில் வெளியான சுந்தரா டிராவல்ஸ் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை ராதா.இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்தது.இதனை அடுத்து சில படங்களில் கதாநாயாகியாக நடித்திருந்தார்.

இதையடுத்து, திருமணம் செய்து கொண்டு ஒரு குழந்தைக்கும் தாயானார் ராதா,கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார்.பின்னர் எண்ணூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக இருந்து வரும் வசந்த ராஜன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதை அடுத்து, அவரை இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.


இதன்பிறகு வசந்த ராஜா தன்னை அடித்து துன்புறுத்துவதாக எழும்பூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதை தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் வசந்த ராஜாவிடம் தீவிரமாக விசாரணை நடத்தினார்கள். இதெல்லாம் தற்பொழுது ஓய்ந்திருக்கும் நிலையில் தற்போது மீண்டும் சின்னத்திரையில் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருக்கிறார் ராதா. 

அண்மையில் பேட்டி ஒன்றில் என்னுடைய இளம் வயதில் நான் நிறைய தவறுகளை செய்து விட்டேன். சிறுவயதில் இருந்தே படத்தில் நடிப்பது தான் என் லட்சியமாக இருந்தது. ஆனால், திருமணத்திற்கு பிறகு வீடு குடும்பம் என்று ஐக்கியமாகி விட்டேன். இது நான் செய்த மிகப்பெரிய தவறு. என்னுடைய கேரியரை தொலைத்துவிட்டு திருமணத்தை செய்து கொண்டேன். இது போல் நான் செய்திருக்கக் கூடாது.


என்னுடைய வேலை, என்னை புரிந்து கொண்ட ஒருவரை நான் தேர்வு செய்து திருமணம் செய்து கொண்டு இருக்க வேண்டும். உங்களை புரிந்து கொண்ட ஒருவர் வாழ்க்கை துணையாக அமையவில்லை என்றால், நீங்கள் தனியாகவே இருந்து விடுங்கள். என் வாழ்க்கையில் நான் மிகப்பெரிய தவறு செய்து விட்டேன். இந்த தவறை யாரும் தயவு செய்துவிடாதீர்கள். ஒரு நடிகையாக இன்றைய இளம் நடிகைகளுக்கு நான் சொல்லும் அட்வைஸ் இதுதான் என்றார்.


Advertisement

Advertisement

Advertisement