சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோட்டில் , அருணுடன் சண்டை போட்டுவிட்டு சீதா வீட்ட வந்த விஷயத்தை முத்துவுக்கு மீனா சொல்லுகிறார்.
இன்னொரு பக்கம் பார்வதிக்கு காய்ச்சல் என்று அவரது நண்பர் சூப் வைத்து கொண்டு வந்து கொடுக்கிறார். அப்போது பார்வதி குடிக்கும் போது, புறக்கடித்தது. இதனால் அவர் தலையை தட்டும் போது, விஜயா என்ட்ரி கொடுக்கிறார்.
இதனை பார்த்துவிட்டு சூப்பு கொடுக்கிறேன் என்று எனக்கு ஆப்பு வைத்து விடாதீர்கள் என்று சொல்லுகின்றார். இதைக் கேட்ட அவர் நான் தனிமையில் இருக்கிறேன், வயசான காலத்தில் தனிமையாக இருப்பது யாருக்கும் நடக்கக்கூடாது. எனக்கு பார்வதி நல்ல நண்பர் மட்டும் தான் என்று சொல்லுகின்றார்.

இதை தொடர்ந்து ரவி வீட்டுக்கு வந்ததும் ஸ்ருதி சண்டை போடுகின்றார் . ஆனாலும் ஸ்ருதியின் அம்மா அப்பா செய்த காரியத்தை ரவி சொல்ல முற்படுகையில், நீ எதையும் சொல்ல வேண்டாம் என்று ஸ்ருதி தடுக்கின்றார்.
அதன் பின்பு ஆன்லைனில் சாமான்களை சேல்ஸ் பண்ணுவதற்கு மனோஜ் திட்டம் போடுகின்றார். ஸ்ருதியும் ஆன்லைனில் சாப்பாடை டெலிவரி பண்ணுவதற்கு திட்டம் போடுகின்றார். இதுதான் இன்றைய எபிசோட்.
Listen News!