• Apr 27 2024

கமலுடன் ஒரே வீட்டில் இருந்த சிம்ரன்... வேறொருவரைத் திருமணம் செய்யக் காரணம் என்ன தெரியுமா..!

Prema / 8 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் எவர்கிறீன் நடிகையாக பல இளைஞர்களின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். அதுமட்டுமல்லாது தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களான ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விகாரம் எனப் பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்துள்ளார்.


இவர் 2003ஆம் ஆண்டு தீபக் என்பவரை திருமணம் செய்துகொண்டு குடும்ப வாழ்க்கையில் இணைந்தார். இவர்களுக்கு இரு மகன்கள் உள்ளனர். திருமணத்தின் பின்னர் நடிப்பதைக் குறைத்துக் கொண்ட சிம்ரன் கடந்த ஆண்டு வெளிவந்த ராக்கெட்ரி படத்தில் நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார். 


இந்நிலையில் பேட்டி ஒன்றில் சர்ச்சை நாயகன் பயில்வான், கமல் குறித்தும், சிம்ரன் குறித்தும் அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றினை கூறியுள்ளார். அதாவது கமலும் சிம்ரனும் இணைந்து மூன்று படங்களில் நடித்திருந்தனர்.

அத்தோடு சிம்ரனும் கமலும் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் வாழ்ந்து வந்தனர். அந்த சமயத்தில் சிம்ரனின் சம்பளத்தை அவருக்கு தெரியாமல் கமல் வாங்கி விட்டார். இதனைத் தொடர்ந்து சிம்ரன் தயாரிப்பாளரிடம் சென்று தன்னுடைய சம்பளத்தை கேட்டிருக்கின்றார்.


அதற்கு அந்தத் தயாரிப்பாளர் "கமல் சார் உங்களுடைய சம்பளத்தை வாங்கி சென்றுவிட்டார்" எனப் பதிலளித்துள்ளார். இதனால் ஷாக்கான சிம்ரன் சரி நம்ப ரெண்டு பேரும் ஒண்ணா தானே இருக்கோம் என்று சொல்லி அதைவிட்டுவிட்டாராம்.

இதன் பின்னர் ஒரு கட்டத்தில் கமலுக்கு பயந்து தன்னுடைய பாதுகாப்புக்காக தீபக் என்பவரை சிம்ரன் திருமணம் செய்து கொண்டதாக பயில்வான் கூறியிருக்கின்றார்.

Advertisement

Advertisement

Advertisement