• May 05 2024

பிக்பாஸ் வீட்டின் இரண்டாம் வாரத் தலைவர் யார் தெரியுமா?- இது என்ன புது வினோதமாக இருக்கு

stella / 1 year ago

Advertisement

Listen News!


பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது ஆரம்பிக்கப்பட்டு தற்பொழுது மூன்றாவது வாரத்தை எட்டியுள்ளது. இரண்டு வாரங்களில் பரபரப்பான பல காட்சிகள் இடம் பெற்றன. அதிலும் ரசிகர்களையும் சரி ஹவுஸ்மேட்டுகளையும் சரி குஷிப்படுத்தி வந்த ஜி.பி முத்து பிள்ளைகளை பார்க்க வேண்டும் என்பதால் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

இது ரசிகர்களை மட்டுமல்லாது கமல்ஹாசனையும் கடும் சோகத்துக்குள் தள்ளியது. அதே போல கடந்த வாரம் எவிக்டாகி சாந்தி மாஸ்டர் வெளியேறினார். அவர் வெளியேறும் போது தனக்கு பதிலாக அடுத்த வாரத் தலைவர் போட்டிக்கு தகுதியானவராக குயின்சியைத் தேர்வு செய்து விட்டு சென்றார்.


அந்த வகையில் இன்று புதிய தலைவருக்கான பேட்டி நடந்தது. அதில் மகேஷ்வரி ஏடிகே குயின்சி ஆகியோர் பங்குபற்றி இருந்தனர்.அதன்படி இவர்களுக்கு ஒரு டாஸ் கொடுக்கப்பட்டது.மூன்று போட்டியாளர்களும் அவர்கள் கொடுத்த கலர்பொடியை வைத்து கோலம் போடுவது, அதை மற்ற போட்டியாளர்கள் தேர்வு செய்து அதில் அதிக ஓட்டு பெரும் நபர் அடுத்த வாரத்திற்கான தலைவராக தேர்வு செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. 

அதன்படி கோலப்போட்டி நடந்ததில் மகேஸ்வரி, ஏடிகே வை விட அதிகமாக வாக்குகள் பெற்ற குயின்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டார். தலைவராக தேர்வு செய்யப்பட்ட குயின்சி உடனடியாக 4 டீம்களை பிரித்து இந்த வாரத்திற்கான வேலைகளை ஒதுக்கினார்.இவர் தேர்வானது ரசிகர்களையே ஆச்சரியப்பட வைத்துள்ளது.


அதாவது வீட்டில் நன்றாக செயல்படுபவர்கள் ஓரங்கட்டப்படுவதும் ஜாலியா இருப்பவர்கள் முன்னணி வகிப்பது எப்போதும் நடைபெறுவது வழமை தானே என ரசிகர்கள் கூறி வருகின்றனர். அத்தோடு குயின்சிக்கு டீனைய ஹவுஸ்மேட்டுடன் எந்த முரண்பாடும் இல்லை  என்பதும் முக்கியமாகும்.


Advertisement

Advertisement

Advertisement