• May 03 2024

கே.ஜி.எப் 3 படத்தின் கதாநாயகி யார் தெரியுமா?- லேட்டஸ்டாக வெளியாகிய தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரிக்கப்பட்டு கடந்த ஏப்ரல் மாதம் வெளியாகிய திரைப்படம் தான் கே.ஜி.எப் 2. இத்திரைப்படத்தின் முதல் பாகம் வெற்றியடைந்ததைத் தொடர்ந்தெ இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது.

இப்படத்தின் கதாநாயகனாக யாஷ் நடித்திருந்தார். கதாநாயகியாக நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடித்திருந்தார்.இவர்களுடன் பாலிவூட் நடிகர் சஞ்சய்தத், ரவீணா டாண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ், அச்சுத் குமார், ராவ் ரமேஷ், ஈஸ்வரி ராவ், ராமச்சந்திர ராஜு, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பலர் நடித்தனர்.


இந்த 10,000 திரையரங்குகளில் கன்னடம், இந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியானது.இந்தியாவில் மட்டும் முதல் நாளில் 134.5 கோடி ரூபாயை மொத்த வசூலாக வசூலித்தது. உலகம் முழுவதும்  1200 கோடிக்கும் மேல் மொத்த வசூலாக ஈட்டியது. 

இந்த படத்தின் மூன்றாம் பாகமும் வரவிருப்பதால் அதன் படப்பிடிப்பும் விரைவில் வரக் காத்திருக்கின்றது.இரண்டாம் பாகம் முடிவடையும் போது மூன்றாவது பாகத்திற்கு அடித்தளமாக படத்தின் கிளைமாக்ஸ் அமைந்திருக்கும். இந்த இரண்டாம் பாகத்தில் கதாநாயகியாக நடித்த ஶ்ரீநிதி ஷெட்டி (ரீனா) இறப்பது போல படத்தில் காட்சி அமைந்திருக்கும். 


இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை ஶ்ரீநிதி ஷெட்டியிடம் ரசிகர் ஒருவர், கே.ஜி.எஃப் படத்தின் மூன்றாவது பாகத்தில் நடிப்பீர்களா? ரீனா கதாபாத்திரம் மூன்றாவது பாகத்தில் வேண்டும் " என கேட்டிருந்தார்.  இதற்கு பதில் அளித்த, ஶ்ரீநிதி ஷெட்டி,  "இதற்கு உண்மையிலேயே விடை தெரியவில்லை. இதற்கான விடை ஒருவருக்கு மட்டுமே தெரியும். அவர்தான் பிரசாந்த் நீல்!" என பதில் அளித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement