தென்னிந்திய சின்னத்திரையில் சூப்பர் ஹிட்டாகவும் ரசிகர்களைக் கவர்ந்ததாகவும் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியின் தமிழில் 6 வது சீசன் விஜய் டிவியில் ணளிபரப்பாகி வருகின்றது. மேலும் மொத்தமாக 21 போட்டியாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.
ஆட்டம் ,பாட்டம் ,சண்டை ,கோபம் ,அழுகை அனைத்து விதமான உணர்ச்சிப் பெருக்குடன் மிகவும் சுவாரஸியமாக நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது. மேலும் கடந்த வாரம் தான் ஆரம்பிக்கப்பட்டதால் இன்னும் யாரும் எலிமினேஷன் செய்யப்படவில்லை.வீட்டின் தலைவராக ஜி.பி முத்து பொறுப் பேற்றுள்ளார்.
இந்த நிலையில் இந்த நிகழ்ச்சியில் முதல் வாரத்தில் மனதை வென்ற பிரபலங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.அதன்படி முதலாவதாக ஜிபி முத்து இடம் பிடித்துள்ளார். இவருக்கென்று ஏற்கனவே தனி ரசிகர் பட்டாளம் உள்ள நிலையில் இந்த நிகழ்ச்சியானது நல்லதொரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.
இரண்டாவதாக ரட்சிதா மகாலட்சுமி தேர்வாகியுள்ளார். ஜனனி மீது இவர் காட்டும் அன்பும், இவரின் அடக்கமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. அடுத்து மூன்றாவது இடத்தை ஆயிஷா பிடித்துள்ளார். இவர் ஏற்கனவே சத்யா சீரியல் மூலம் தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கியவர் என்பதும் தெரிந்ததே.
அடுத்த இடத்தை இலங்கை நாட்டின் நிகழ்ச்சித் தொகுப்பாளரான ஜனனி பிடித்துள்ளார்.குழந்தை போன்ற முகத்துடனும் செல்லமான பேச்சுடனும் அங்கு உள்ளவர்களை மட்டுமல்லாமல் ரசிகர்களையும் ஈர்த்து வருகிறார்
ஐந்தாவது இடத்தை விஜய் டிவியின் மற்றொரு பிரபலமான அமுதவாணன் பிடித்துள்ளார்.இவர் பிக் பாஸ் ஷோவிலும் தனது தனி திறமையால் ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!