• May 18 2024

எதிர்நீச்சல் சீரியலில் அடுத்து நடக்கப் போவது என்ன தெரியுமா?- இயக்குநர் கூறிய சுவாரஸியமான தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சியான சன்டிவியில் சூப்பர் ஹிட்டாகவும் விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் எதிர் நீச்சல். இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கப்போகின்றது என்பது குறித்து இயக்குநர் திருச் செல்வன் பேசியிருக்கின்றார்.

அதில் சிகர்கள் எதிர்பார்த்திருந்த கேள்விகளை அந்த சீரியலில் நந்தினி ஆக நடிக்கும் ஹரிப்பிரியா கேட்டிருக்கிறார். அதற்கு திருச்செல்வனின் சிறப்பான பதில் பலருக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.


மேலும் அந்த கலந்துரையாடலில் ஹரிப்பிரியா எப்போது இந்த நான்கு பெண்களும் எதிர்நீச்சல் போடுவார்கள் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டிருக்கிறார்கள் அதற்கு உங்களுடைய பதில் என்ன? ? என்று கேட்டிருக்கிறார். அதற்கு திருச்செல்வம் இனி அந்த நான்கு பெண்களின் டேலண்ட் எல்லாம் வெளியே தெரிய போகிறது. இவங்களுக்குள்ளேயே ஒரு சந்தேகம் வரும் எனக்குள் இன்னும் என்னுடைய பழைய டேலண்ட் இருக்கிறதா என்று, ஏனென்றால் இவர்கள் படித்து பல வருடங்கள் ஆகிவிட்டது. பத்து வருடம் 15 வருடங்கள் கடந்து விட்டது. அதனால் இனிமேல் அந்த மாதிரி இருப்போமா என்று அவர்களுக்குள்ளே ஒரு சந்தேகம் வரும்.


அந்த ஒரு நேரத்தில் எடுக்கும் முடிவுகள் மூலமாக மீண்டும் தங்களுடைய திறமையை வெளிக் கொண்டு வர வேண்டும் என்று கூறும் விதமாகவும் இருக்கும் என கூறியிருக்கிறார்.அதுமட்டுமல்லாமல் தங்களுக்குள் இருக்கும் டேலண்ட் எப்போதும் நம்மளை விட்டு போகாது நமக்குள்ளே தான் இருக்கு என்பதை புரிந்து கொண்டு எடுக்கும் முடிவுகள் இனி வரப் போகிறது என்று கூறி இருக்கிறார்.


 திடீரென்று ஒருவரை கொண்டு வேறு ஒரு இடத்தில் விட்டால் அவர்களால் அங்கே உடனே செட்டாக முடியாது. கொஞ்சம் டைம் எடுக்கும் அதற்குப் பிறகு அந்த இடத்திற்கு தகுந்த போல தன்னுடைய திறமையால் அங்கே செட் ஆகி விடுவோம் அதுபோலத்தான் இனி தன்னுடைய திறமையை அந்த குணசேகரன் வீட்டிற்குள் நிரூபிக்க அந்த நான்கு பெண்களும் போராடுவார்கள். அதற்குப் பிறகு அவர்கள் வெளியேயும் வெற்றி பெறுவார்கள். அந்த மாதிரி சீன்கள் தான் இனி வரப்போகிறது என்று கூறியிருக்கிறார்.




Advertisement

Advertisement