• Jun 07 2025

தியட்டரை மிரட்ட வரும் பாகுபலி..! ராஜமெளலியின் அதிரடி முடிவு.. என்ன தெரியுமா.?

subiththira / 13 hours ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி எனப் பல்வேறு மொழிகளில் கடந்த ஒரு தசாப்தத்தை அசுர வெற்றியுடன் தீர்த்துவைத்த படம் தான் பாகுபலி. ராஜமெளலி இயக்கத்தில் வெளிவந்த பாகுபலி பாகம் 1 மற்றும் பாகம் 2 திரைப்படங்கள் இந்திய சினிமாவின் அடையாளமாக மாறின.


இப்போது, இந்த இரண்டு பாகங்களையும் இணைத்து முக்கியமான காட்சிகளை மட்டும் வைத்து ஒரு புதிய படமாக உருவாக்கி அக்டோபர் 2025ல் உலகம் முழுவதும் திரையிட உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இரண்டு பாகங்களாக வெளியான இந்தப் பிரமாண்டத் திரைப்படம் இந்திய சினிமாவில் புதிய அத்தியாயத்தையே ஆரம்பித்தது. இந்த இரண்டு பாகங்களும் சேர்ந்து உலகளவில் 1200 கோடி வசூல் செய்து இந்திய சினிமா வரலாற்றில் புதிய மைல்கல்லாக மாறியது.


அத்தகைய படத்தின் முக்கிய பாகங்களை வைத்து 3மணிநேர படத்தினை உருவாக்கி அக்டோபர் 2025ல் உலகம் முழுவதும் வெளியிடுவதற்கு படக்குழு திட்டமிட்டுள்ளது. முக்கியமாக IMAX மற்றும் 4DX திரைகளில் ரிலீஸ் செய்யப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இது பாகுபலியின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய தரிசனம் போல் இருக்கும் எனவும் கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement