• May 04 2024

30 வருடத்திற்கு பிறகு மீண்டும் நடித்தது குறித்து அமலா என்ன சொல்லி இருக்கிறார் தெரியுமா?- பார்வையாளராத் தான் இருப்பாங்களா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 90களில் தனது அழகினாலும் இயல்பான நடிப்பினாலும் தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் அமலா. இவர் தற்பொழுது 30 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரி என்ட்ரி கொடுத்துள்ளார்.

அதாவது 'ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்' தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்ரீ கார்த்தி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'கணம்'படத்தில் தான் அம்மா காரெக்டரில் நடிக்க கமிட்டாகியுள்ளார். இப்படத்தில் சர்வானாந்தா கதாநாயகனாக நடிப்பதோடு ரீத்து வர்மா கதாநாயகியாக நடித்துள்ளார்.


இந்த நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.இந்த நிகழ்வில் நடிகை அமலா பேசுகையில், “ஒரு படத்தை பற்றி சாதாரணமாக இவ்வளவு பேச மாட்டார்கள். என்னுடைய இளமை காலத்தில் ஆதரித்த தமிழ் மக்களிடம் 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அம்மாவாக வந்துருக்கிறேன். இப்படம் எனக்கு மிகமிக சிறப்பான படம்.

எங்கிருந்தாலும், எப்போது இருந்தாலும், எந்த மொழியாக இருந்தாலும், எந்த நாட்டில் இருந்தாலும், எந்த நேரமாக இருந்தாலும் இந்த படம் அனைவரையும் இணைக்கும்; உங்களை சிரிக்க வைக்கும். ஆழமான அன்பை உணர்வுபூர்வமாக அழகாக கொடுத்திருக்கிறார் ஸ்ரீ கார்த்திக். அம்மாவாக இருக்கும் அனைவருக்கும், போராட்டங்களோடு வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கும் இப்படம் நெருக்கமாக இருக்கும். 

இந்த படத்தில் ஒரு பகுதியாக இருப்பதில் பெருமையடைகிறேன். இந்த கதாபாத்திரம் கொடுத்ததற்கு ஸ்ரீ கார்த்திக்கு நன்றி. உங்கள் அம்மாதான் இந்த படத்திற்கு உத்வேகம் கொடுத்தார் என்று எனக்கு தெரியும். இந்தப்படத்தை அவரும் நம்முடன் பார்த்து நிச்சயம் ஆசீர்வதிப்பார் என்று நம்புகிறேன். நான் எந்த படம் பார்த்தாலும் பார்வையாளராக தான் பார்ப்பேன். வரும் செப்டம்பர் 9ஆம் தேதியும் இப்படத்தை பார்வையாளராக பார்க்க ஆவலாக உள்ளேன்” எனக் கூறினார்.


Advertisement

Advertisement

Advertisement