• May 06 2024

சரத்பாபுவின் உடலுக்கு நடிகர் கமல்ஹாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தாதற்கு காரணம் என்ன தெரியுமா?

stella / 11 months ago

Advertisement

Listen News!

80 மற்றும் 90-களில் பல படங்களில், கதாநாயகனாகவும் குணச்சித்திர வேடத்தில் நடித்து பிரபலமானவர் சரத்பாபு. கடந்த இரண்டு மாதமாகவே உடல் நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதை தொடர்ந்து, திரையுலகை சேர்ந்த பிரபலங்கள் பலர் தொடர்ந்து, தங்களின் அஞ்சலிகளையும் சரத் பாபு பற்றிய நினைவுகளையும் பகிர்ந்து வந்தனர்.இந்தி, கன்னடம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சரத் பாபு, அழகில் பல ஹீரோக்களை பொறாமை பட வைத்தவர்.


 இந்த அழகு தான், இவருக்கு சில படங்களின் வாய்ப்பு கிடைக்காமல் போகவும் காரணமாகவும் அமைந்தது. ஹீரோவாக தொடர்ந்து நடிக்கமுடியவில்லை என்றாலும், இரண்டாவது ஹீரோவாக பல படங்களில் நடித்துள்ளனர். குறிப்பாக ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோருடன் இணைந்து ஏராளமான பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்திருந்தார் சரத்பாபு.

இவரது உடலுக்கு பல பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியும் இருந்தனர். குறிப்பாக அவரது இறுதி சடங்குகள் இன்று நடந்த நிலையில் ரஜினி, சூர்யா உள்ளிட்ட பல நடிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.


இருப்பினும் நடிகர் கமல் இறுதி அஞ்சலி செலுத்த வரவில்லை. டுவிட்டரில் மட்டும் இரங்கல் தெரிவித்து இருந்தார்.அவர் வராதது ஏன் என நடிகை சுஹாசினி விளக்கம் கொடுத்து இருக்கிறார். கமல் இந்தியன் 2 ஷூட்டிங்கில் இருப்பதால் முழு மேக்கப் உடன் அந்த கெட்டப்பில் பாதியில் வந்து செல்ல முடியாத நிலை, அதனால் தான் அவரால் வர முடியவில்லை என சுஹாசினி கூறி இருக்கிறார்.

மேலும் இவரது இறுதிச்சடங்கை நடிகர் சங்கமும் இணைந்து செய்தது. தற்பொழுதும் பல பிரபலங்கள் தங்களது இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement