• May 03 2024

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் புதிய படத்தின் பெயர் என்ன தெரியுமா?- வெளியான லேட்டஸ்ட் தகவல்!

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் பிரமாண்ட இயக்குநராக வலம் வருபவர் தான் இயக்குநர் ஷங்கர். இவர் விஜய் கமல் ரஜினி விக்ரம் எனப் பல முன்னணி நடிகர்களை வைத்து திரைப்படம் இயக்கியுள்ளார். அந்த வகையில் தற்பொழுது தெலுங்கு நடிகரான ராம் சரணை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகின்றார்.

இந்த படத்தை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக இருந்து வரும் தில் ராஜு தயாரிக்கிறார். படத்தின் கதாநாயகியாக கியாரா அத்வானி அதிகாரப்பூர்வமாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி விவுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படத்தின் மொத்த படப்பிடிப்பையும் முடித்து 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு படத்தினை ரிலீஸ் செய்ய படத்தின் தயாரிப்பாளர் முடிவு செய்துள்ளாராம்.

இந்த படத்தில் முக்கியக் கதாபாத்திரங்களில் சுரேஷ் கோபி, ரஹ்மான் ஆகியோர் நடிக்கின்றனர். இந்நிலையில் வில்லனாக நடிக்க எஸ் ஜே சூர்யாவிடம் பேசி சம்மதம் வாங்கியுள்ளார்களாம்.

இந்த படமானது RC 15 என்று தற்காலிகமாக அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் படத்துக்கு தமிழ் தெலுங்கு என இருமொழிகளிலும் பரிச்சயமான தலைப்பை வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. படத்தில் ராம்சரண் ஐஏஎஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதையடுத்து ‘அதிகாரி’ என்று தலைப்பு வைக்க பரிசீலனை செய்துவருவதாக தகவல் வெளியாகியுள்ளதைக் காணலாம்.

பிற செய்திகள்

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் தமிழ் டீசரை வெளியிடவுள்ள நடிகர் யார் தெரியுமா?- அட இது நம்ப லிஸ்ட்லிலையே இல்லையே

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement