• Apr 28 2024

நடிகர் விஜய் தன்னுடைய அப்பாவிடமிருந்து விலகியதற்கு முக்கிய காரணம் என்ன தெரியுமா?- இப்படியெல்லாம் பண்ணினாரா?

stella / 7 months ago

Advertisement

Listen News!

பொதுவாகவே  சினிமா பிரபலங்கள் தங்களுடைய வாரிசுகளை  சினிமாவில் ஜெயிக்க வைப்பதற்காக அவர்களுக்கு முக்கிய வழிகாட்டியாக இருப்பார்கள். அப்படித்தான் ஆரம்பத்தில் விஜய்க்கு வழிகாட்டியாக    எஸ் ஏ சந்திரசேகர் இருந்தார். இதன்மூலமகவே இளையதளபதி எனும் மகுடத்தினை விஜய் சூடிக்கொண்டார். 

தொடர்ந்து பல படங்கள் நடித்துள்ளார் அதில்  சில படங்கள் நன்றாக ஓடியும் ஒரு சில படங்கள் தோல்வியும் அடைந்திருக்கிறது. இப்படியே இந்நிலையில்  விஜய் ஒரு கட்டத்தில் முன்னணி ஹீரோவாக வந்த நிலையில், அவருடைய அப்பா  விஜய்யிடம் நீ தான் அடுத்த சூப்பர் ஸ்டாராக ஆகணும்.

அதற்கு   உன்னுடைய முழு கவனத்தையும் செலுத்தி நடித்து வரவேண்டும் என்று கூறியிருக்கிறார்.


 தொடர்ந்து இதையே கூறி வந்ததால் விஜய்க்கு ஒரு கட்டத்திற்கு மேல் தந்தை மீது  வெறுப்பாகிவிட்டது. அத்துடன் சில படங்களில்  நடித்தால் உனக்கு வெற்றி கிடைக்கும் என்று விஜய்க்கு பிடிக்காத கதையை ரொம்பவே டார்ச்சர் கொடுத்து சில படங்களில் நடிக்க வைத்திருக்கிறார். அப்படி இவருக்கு பிடிக்காமல் நடித்த படம் தான் சுக்கிரன் மற்றும் மதுரை. அதுபோலவே இந்த ரெண்டு படங்களும்  விஜய்க்கு தோல்வி படமாகவே அமைந்தது


இதனால் ரொம்பவே கோவமான  விஜய் ஒரு கட்டத்திற்கு மேல இந்த மாதிரி டார்ச்சர் அனுபவிக்க முடியாததால் மொத்தமாக அப்பாவிடம் இருந்து விலகி விட்டார். அத்துடன் இனி என்னுடைய கேரியரை நானே பார்த்துக்கொள்கிறேன். தயவு செய்து என்னுடைய விஷயத்தில் நீங்கள் இனி தலையிட வேண்டாம் என்று திட்டவட்டமாக கூறி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement