• May 04 2024

31வருடங்களுக்கு பின் பாலிவுட் நடிகரோடு நடிக்கும் ரேவதி-எந்தப் படத்தில் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

மண் வாசனை, மெளன ராகம், தேவர் மகன் உள்ளிட்ட பல படங்களில் நாயகியாக நடித்த நடிகை ரேவதி பாலிவுட் நடிகர் சல்மான் கான் படத்தில் நடித்து வருகிறாராம் என தகவல் வெளியாகி உள்ளது.பாலிவுட்டில் ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை ரேவதி ஏற்கனவே சல்மான் கானுக்கு ஜோடியாகவும் இந்தியில் நடித்துள்ளது பலருக்கும் தெரிந்திருக்காது.இவ்வாறுஇருக்கையில்  பல ஆண்டுகள் கழித்து மீண்டும் சல்மான் கான் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகை ரேவதி நடித்து வரும் நிலையில், அவர் என்ன ரோலில் எந்த படத்தில் நடித்து வருகிறார் என்பது குறித்து இங்கே பார்ப்போம்..

பாலிவுட்டின் பாக்ஸ் ஆபிஸ் கிங்கான சல்மான் கான் நடிப்பில் டைகர் 3 திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. இயக்குநர் மணீஷ் ஷர்மா இயக்கத்தில் சல்மான் கான், கத்ரீனா கைஃப், இம்ரான் ஹாஸ்மி நடித்து வரும் டைகர் 3 படத்தில் ஷாருக்கான் கேமியோ ரோலில் நடித்து வருகிறார்.அத்தோடு  அடுத்த ஆண்டு இறுதியில் டைகர் 3 திரைப்படம் வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.



அத்தோடு தமிழில் மண் வாசனை படம் மூலம் அறிமுகமான நடிகை ரேவதி 1991ம் ஆண்டு பாலிவுட்டில் சல்மான் கானின் 'லவ்' படம் மூலமாக கதாநாயகனாக அறிமுகமானார். நடிகை ஸ்ரீதேவியை போலவே பாலிவுட்டில் பல படங்களில் இவர் நடித்துள்ளார். இவ்வாறுஇருக்கையில் , 31 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சல்மான் கான் படத்தில் இணைந்து நடித்து வருகிறார் ரேவதி. 'லவ்' திரைப்படத்தின் "சாதியா துனே கியா கியா" பாடல் பாலிவுட் ரசிகர்களின் எவர்க்ரீன் ஃபேவரைட் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது.

31 வருஷத்துக்கு முன்னாடி கதாநாயகியாக  நடித்த ரேவதி சல்மான் கானின் அம்மா ரோலில் எல்லாம் நடிக்கவில்லை. டைகர் மற்றும் டைகர் 2 படங்களில் கிரிஷ் கர்னாட் நடித்து வந்த RAW தலைமை அதிகாரி கதாபாத்திரத்தில் தான் நடித்து வருகிறார். அத்தோடு கிரிஷ் கர்னாட் மறைந்த நிலையில், அந்த கதாபாத்திரத்திற்கு ஜேம்ஸ் பாண்ட் படங்களின் வரும் எம் கதாபாத்திரம் போல ஒரு பெண் கதாபாத்திரத்தை இயக்குநர் உருவாக்கிய நிலையில், ரேவதியை அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்துள்ளனர்.


அத்தோடு நடிகை ரேவதி ஆங்கிலம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் சில படங்களை இயக்கியுள்ள நிலையில், தற்போது இந்தியில் மீண்டும் சலாம் வெங்கி எனும் படத்தை இயக்கி வருகிறார். விரைவில் அந்த படம் நிறைவடைந்து திரைக்கு வரவுள்ள நிலையில், சல்மான் கானின் டைகர் 3 படத்திலும் சூப்பரான ரோலில் கலக்க காத்திருக்கிறார் ரேவதி.

இந்த ஆண்டு பூதகாலம் மற்றும் வாரியர் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் ரேவதி. அத்தோடு முன்னதாக ஓடிடியில் வெளியான நவரசா வெப்சீரிஸிலும் மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ஜோதிகாவின் ஜாக்பாட் படத்தில் காமெடி ரோலில் கலக்கிய ரேவதி தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகளிலும் நடித்து ஏகப்பட்ட படங்களை கைவசம் வைத்திருக்கிறார்.

அத்தோடு கடந்த ஆண்டு பிரபுதேவா இயக்கத்தில் ராதே படத்தில் நடித்த சல்மான் கானுக்கு அந்த படம் பெரிய ஃபிளாப் ஆக மாறியது. அதன் பின்னர் வெளியான ஆண்டிம் படமும் ஓடவில்லை. சமீபத்தில் சிரஞ்சீவி உடன் இணைந்து மோகன் ராஜா இயக்கத்தில் நடித்த காட்ஃபாதர் படமும் காலை வாரி விட்டது. இவ்வாறுஇருக்கையில், டைகர் 3 படத்தைத் தான் பெரிதும் நம்பி இருக்கிறார் சல்மான் கான்.

Advertisement

Advertisement

Advertisement