• May 09 2024

டீ விற்றவர் தான் தற்பொழுது நாட்டை ஆளுகின்றார் யாரையும் குறையாக நினைக்காதீங்க-நடிகை யாஷிகா ஆனந்த்

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய்டிவியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபல்யமானவர் தான் யாஷிகா ஆனந்த். இவர் இதற்கு முதல் இருட்டு அறையில் முரட்டு குத்து என்னும் திரைப்படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.

பிக்பாஸைத் தொடர்ந்து சில திரைப்படங்களில் மட்டும் நடித்து வரும் இவர் சமூக வலைத்தளங்களில் மிக ஆர்வமாக இருப்பதோடு தனது தாறுமாறு கவர்ச்சி போட்டோஷூட் ஸ்டில்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் தமிழக அரசின் உயர்கல்வி துறை அமைச்சர் கே.பொன்முடி பேசும்போது 'ஹிந்தி படித்தால் வேலை கிடைக்கும் என சொல்கிறார்கள், ஆனால் இங்கே பானி பூரி விற்பவர்கள் யார்' என கேள்வி எழுப்பி இருந்தார். இது வடநாட்டு மீடியாக்களில் பெரிய சர்ச்சையாக்கப்பட்டது.

ஹிந்தி பேசுபவர்கள் எல்லோரையுமே அவர் பானி பூரி விற்பவர்கள் என சொல்லிவிட்டார் என பலரும் அவருக்கு எதிராக பேசி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகை யாஷிகா ஆனந்தும் திமுக அமைச்சருக்கு பதிலடி கொடுத்து பதிவிட்டு இருக்கிறார். "ஒருவரது மொழிக்கும் வேலைக்கும் எந்த தொடர்பும் இல்லை சார். எல்லோரும் வாழ தேவையான பணம் சம்பாதிக்க தான் முயற்சி செய்கிறார்கள். யாருடைய திறமையையும் குறைத்து மதிப்பிடாதீர்கள்."

"டீ விற்றவர் தற்போது நாட்டை ஆள்கிறார். பானி பூரி விற்பவரும் குறைந்தவர் அல்ல. அவர்களை கிண்டல் செய்யாதீர்கள்" என யாஷிகா குறிப்பிட்டு உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement