• May 08 2024

நான் வேண்டுமா..? இவங்க வேண்டுமா..? ஜஸ்வர்யாவால் கண்ணன் எடுக்கப்போகும் முடிவு என்ன..பரபரப்பு திருப்பங்களுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ்...!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரை சீரியல்களில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.

அண்ணன் தம்பிகளின் ஒற்றுமையை வைத்து நடக்கும் இந்த சீரியலில் தற்போது விரிசலே ஏற்பட்டுள்ளது.அதாவது  ஜீவா மண்டத்தில் வைத்து மூர்த்தியை பேசிவிட்டு மாமனார் வீட்டில் தங்கி நிற்கின்றார்.

அது போலவே வீட்டிற்கு வந்த கண்ணனிடம் எல்லோரும் சண்டை இட ஜஸ்வர்யாவிற்கு கோவம் வந்து எல்லோரையும் எதிர்த்து பேசுகின்றார்.

அதன் பிறகு இந்த வீட்டில் என்னால் இருக்க முடியாது எனக் கூறி தனது பெட்டி படுக்கை களை எடுத்துக்கொண்டு வெளியில் கிளம்புகின்றார்.தனம் ஜஸ்வர்யாவை மறிக்க அதையும் கேட்காது செல்ல மூர்த்தி போறவங்கள் போகட்டும் எனக் கூறுகின்றார்.

அதன் பின்னும் நான் இருக்க மாட்டேன் என பையை எடுத்திட்டு வரும் போது கண்ணன் வேண்டாம் என மறிக்கின்றார்.அபடபொழுது ஜஸ்வர்யா நான் வேண்டுமா..? இவங்க வேண்டுமா..? எனக் கேட்கின்றார்.அடுத்து என்ன நடக்கப்போகின்றது..? கண்ணன் என்ன முடிவு எடுக்கப்போகிறார் என பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.



Advertisement

Advertisement

Advertisement