• May 18 2024

இயக்குநர் மணிரத்தினத்திற்கு கொரோனாத் தொற்று ஏற்படவில்லை- உறுதி செய்யப்பட்ட மருத்துவ பரிசோதனை

stella / 1 year ago

Advertisement

Listen News!

பல்லவி அனுபல்லவி என்ற கன்னட படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் இயக்குநர் மணிரத்னம். மலையாளம், இந்தி போன்ற பல மொழிகளிலும் பல பிளாக் பஸ்டர் படங்களை இயக்கி பல விருதுகளை வென்றவர்.தமிழில் பகல் நிலவு என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகினார்.

இந்திய சினிமாவில் தனிக்கென தனி இடத்தை பிடித்த இவர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை திரைப்படமாக உருவாக்கும் முயற்சியில் களமிறங்கி அதில் வெற்றியும் பெற்றுள்ளார்.இவர் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படம் செப்டம்பர் 30 ம் தேதி ரிலீஸாகவுள்ளது

இந்நிலையில் இன்று காலை இயக்குநர் மணிரத்னத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சொல்லப்பட்டது. இதனையடுத்து சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மணிரத்னம் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர் விரைவில் கொரோனா தொற்றில் இருந்து மீண்டு வர ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.ஆனால் அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement