• Apr 27 2024

பாக்கியராஜ் மகளுக்கு திருமணம் ஆகி இவ்ளோ பெரிய மகள் உள்ளாரா..? குழம்பிப்போன ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில்   மிக பிரபலமான இயக்குநரும், நடிகருமாக வலம் வந்து கொண்டிருப்பவர் பாக்கியராஜ். இவர் 1979 ஆம் ஆண்டு வெளிவந்த சுவரில்லாத சித்திரங்கள் என்ற படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமா உலகில் அறிமுகம் ஆனார். அதனைத் தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து இருக்கிறார். தமிழ் சினிமாவில் சிறந்த திரை கதை இருக்கும் படங்களை எடுப்பது தான் பாக்கியராஜின் தனி சிறப்பு.

இதனைத் தொடர்ந்து படங்களை இயக்கி வந்த பாக்கியராஜ் நடிகராகவும் கொடிகட்டி பறந்தார். இறுதியாக தன் மகனை வைத்து ‘சித்து +2’ படத்தை இயக்கி இருந்தார். அதன் பிறகு படங்களை இயக்குவது இல்லை என்றாலும் தொடர்ந்து நடித்து வருகிறார். பாக்கியராஜ் நடிகை பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார் என்பதும் அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருப்பதும் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

பாக்கியராஜ் படம் இயக்குவதற்கு முன்பாக கஷ்டப்பட்டு கொண்டிருந்தபோது அவரை ஊருக்கு போகச்சொல்லி அறிவுறுத்தி அவர் பிரவீனா இதனால் சென்னையை விட்டு கிளம்பிய பாக்கியராஜ் விரைவில் ஒரு மிகப்பெரிய படம் மூலம் நான் திரும்ப வருவேன் என்று தெரிவித்துள்ளார். அத்தோடு இப்படி ஒரு நிலையில் பாக்கியராஜ் அல்சர் ஏற்பட சிகிச்சைக்காக சென்னை வந்த போது தான் இவருக்கு 16 வயதினிலே படத்தில் பாரதிராஜாவுடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

மேலும் அந்த சமயத்தில்தான் மீண்டும் பிரவீனாவை சந்தித்து 1981 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் பாக்கியராஜ். இருப்பினும் திருமணமான இரண்டே வருடத்தில் நடிகை பிரவீணாவிற்கு மஞ்சள் காமாலை ஏற்பட்டு 25 வயதில் உயிரிழந்தார். அவர் உயிரிழந்த ஒரே வருடத்தில் பாக்கியராஜ் பூர்ணிமாவை திருமணம் செய்து கொண்டார். ஆனால், தற்போதும் தன்னுடைய முதல் மனைவியை மறவாத பாக்கியராஜ், பிரவீனா பரிசாக அளித்த மோதிரத்தை தற்போதும் அணிந்து கொண்டிருக்கிறார்.


அதேபோல பிரவீணாவின் புகைப்படம் பாக்கியராஜின் அலுவலத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.அத்தோடு பாக்கியராஜ் இறுதியாக 2010 ஆம் ஆண்டு தன் மகனை வைத்து சித்து +2 படத்தை இயக்கி இருந்தார். அதன் பின்னர் படம் இயக்குவதையே நிறுத்திய பாக்கியராஜ் படங்களில் நடித்து மட்டும் உள்ளார். இறுதியாக இவரது மகன் நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் படத்தில் நடித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


பாக்கியராஜ் மகள் சரண்யா பாக்கியராஜ் இயக்கத்தில் 2006ல் வெளிவந்த பாரிஜாதம் என்ற படத்தில் அறிமுகம் ஆனார். இந்த படத்தின் கதை ஒரு விவகாரமாண கதையாகும். முதல் படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததால், திரையுலகில் இருந்து விலகி மேல் படிப்புக்காக வெளிநாடு பறந்தார். மேலும் இப்படி ஒரு நிலையில் பாக்கியராஜ் வீட்டின் பொங்கல் கொண்டாட்ட புகைப்படங்கள் வெளியாகி இருக்கிறது. அதில் அடையாளம் தெரியாத அளவு இருக்கிறார் சரண்யா. அத்தோடு, அந்த புகைப்படத்தில் ஒரு சிறுமியும் இருக்கிறார். எனவே அது தான் சரண்யா என்ற ஒரு சந்தேகம் எழுந்து இருக்கிறது.

Advertisement

Advertisement

Advertisement