• Apr 27 2024

வலுக்கட்டாயமாக இரண்டு தமிழ் நடிகைகளுக்கு தனுஷ் செய்த லீலை...வெளியான அம்பலமான தகவல்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

திரையுலகை  பொறுத்தவரை நடிகைகளுக்கு லிப்லாக் காட்சி மற்றும் நெருக்கமான படுக்கை காட்சிகளில் நடிக்க முன்பே கதை பற்றி கூறி சம்மதம் வாங்குவார்கள் இயக்குநர்கள். ஆனால் இயக்குநர்கள் கதைக்கு தேவைப்பட்டால் அந்த காட்சிகளை வலுக்கட்டாயமாக நடிகைகளை வைத்து எடுத்துவிடுவார்கள். அதை எடிட் செய்ய கோரியும் சிலர் அந்த காட்சிகளை படத்தில் வைத்து விடுவார்கள். இதனால் பல நடிகைகள் புலம்பி தள்ளியதுண்டு.

மேலும் அப்படி கமல் ஹாசன், ரேகா நடிப்பில் பாலசந்தர் இயக்கத்தில் புன்னகை மன்னன் படம் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. அப்படத்தில் கமல் ஹாசன் ரேகாவிற்கே தெரியாமல் முத்தமிட்டு அதிர்ச்சி கொடுத்தார். எனினும் இதனை சமீபத்தில் நடிகை ரேகா கூறி புலம்பி இருந்தார்கள். அதேபோல் சமீபத்தில் 3 முன்னணி நடிகைகள் அப்படியான சம்பவத்தை சந்தித்திருக்கிறார்கள்.

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான படம் வட சென்னை. மேலும் அப்படத்தில் தனுஷ், ஐஸ்வர்யா ராஜேஷ்-க்கு திடீரென லிப்லாக் கொடுத்திருப்பார். அதில் நான் நடிக்கவே மாட்டேன் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் சொல்லியும் அப்படிபட்ட காட்சியை தனுஷை வைத்து எடுத்துள்ளார் வெற்றிமாறன். அந்த காட்சியை எடிட் செய்யக்கேட்டும் ஐஸ்வர்யா பேச்சை கேட்காமல் படத்தில் வைத்துள்ளார்கள்.

அதேபோல் தொடரி படத்தில் தனுஷ், நடிகை கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்திருப்பார். அப்போது முத்தக்காட்சியில் கீர்த்தி சுரேஷ் நடிக்கமாட்டேன் என்று தெரிவித்தும்  வலுக்கட்டாயமாக அந்த லிப்லாக் காட்சியை எடுத்துள்ளார்கள். அதன்பின்னர்  கீர்த்தி சுரேஷ் கூறியும் அந்த காட்சியை வைத்துவிட்டாராம்.


Advertisement

Advertisement

Advertisement