• May 06 2024

தனுஷ் வற்புறுத்தினார் அவருக்காகத் தான் வந்தேன்- வீல் சேரில் விழாவுக்கு வந்த நித்யா மேனன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் மொழியில் மட்டுமல்லாது அனைத்து மொழிகளிலும் நடித்து தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கி முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் தனுஷ். இவரது குடும்ப வாழ்க்கையில் பல சிக்கல்கள் ஏற்பட்டாலும் கெரியரில் அதிக கவனம் செலுத்தி வருகின்றார்.

இவரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் திருச்சிற்றம்பலம் .இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்றைய தினம் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு நடிகை நித்யா மேனன் வீல் சேரில் வந்திருக்கின்றார்.அதாவது இவர் சமீபத்தில் படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து கால் எலும்பை முறித்துக்கொண்டார்.

அதனால் தான் அவர் வீல் சேரில் தனுஷ் படத்தின் இசை வெளியீட்டு விழாவுக்கு வந்திருக்கிறார்.பொதுவாக மற்ற நடிகைகள் இந்த நிலையில் இருந்திருந்தால் கண்டிப்பாக விழாவுக்கு வந்திருக்க மாட்டார்கள். ஆனால் ப்ரோமோஷனுக்காக நித்யா மேனன் ரிஸ்க் எடுத்து வீல் சேரில் வந்திருப்பதற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

மேலும் தனுஷுக்காக தான் இவ் விழாவுக்கு வந்ததாகவும் கூறினார். இது பற்றி பேசிய நித்யா மேனன், 'நீங்க இல்லாமல் எப்படி என தனுஷ் கூறினார்', வீல் சேரில் ஆவது வரவேண்டும் என தனுஷ் தான் வறுபுறுத்தினார் எனவும் கூறி இருக்கிறார். இவரின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருவகின்றது. அத்தோடு இவர் இப்படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement