• Apr 27 2024

தனுஷ் - ஐஸ்வர்யா விவகாரம்; பரபரப்பு கருத்தை வெளியிட்ட பிரபலம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

ஐஸ்வர்யா தனுஷ் குறித்து வெளியாகும் அனைத்து தகவல்களும்  பொய் என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.


ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யாவும் நடிகர் தனுஷும் கடந்த 2006 ஆம் ஆண்டு காதலித்து இருவீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இவ்வாறுஇருக்கையில்  கடந்த ஜனவரி மாதம் இருவரும் கணவன் மனைவி என்ற பந்தத்தில் இருந்து பிரிந்து வாழப்போவதாக சமூக வலைதளங்களில் தெரிவித்தார்.

நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்த சமந்தாவும் நாக சைதன்யாவும் அறிவித்த ஸ்டைலிலேயே அறிவித்தனர் ஐஸ்வர்யாவும் தனுஷும். இதையடுத்து இருவரையும் சேர்த்து வைக்க இருவரது குடும்பத்தினரும் பெரும் முயற்சி எடுத்தனர். ஆனால் பாஸிட்டிவான ரிசல்ட் எதுவும் கிடைக்கவில்லை.


இவ்வாறுஇருக்கையில்  இருவரும் விவாகரத்து கோரி நீதிமன்றத்தை நாடியிருப்பதாக தகவல் பரவியது. இதுகுறித்து செய்தியாளர் ஒருவர் தனுஷின் அப்பாவான கஸ்தூரி ராஜாவிடம் கேள்வி எழுப்பியப்போது கூட அவர் கடுமையாக கோபப்பட்டார். இதனால் ஐஸ்வர்யாவும் தனுஷும் என்ன முடிவு எடுக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் விவாகரத்து தொடர்பாக பரவிய செய்தி குறித்து நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் பேசியுள்ளார். அதாவது, கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்ல வேண்டும். சந்தேகப்பட்டால் கூட அதை பெரிதுப்படுத்தாமல் சரியாகிவிடுமென்று விட்டுவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.



தனுஷும் ஐஸ்வர்யாவும் கோபத்தில் அப்படி ஒரு முடிவை எடுத்து பிரிந்திருக்கிறார்கள். அவர்களின் இரண்டு குழந்தைகளுக்கும் அப்பா மீதும் அப்பா மீதும் பாசம் அதிகம். சமீபத்தில் அவர்களின் மூத்த மகனுக்கு அவர் படிக்கும் பள்ளியில் முக்கிய பொறுப்பு ஒன்று கொடுத்தார்கள். அதில் தனுஷும் ஐஸ்வர்யாவும் பங்கேற்றபோதே மீண்டும் இணைந்து விடுவார்கள் என்ற நம்பிக்கை வந்தது.

அத்தோடு தனுஷும் ஐஸ்வர்யாவும் ஒன்றாக சேர்வார்கள் என்று ஏற்கனவே கூறியிருந்தேன். சமீபத்தில் சில செய்திகளில் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து கேஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.மேலும் அந்த தகவல்கள் அனைத்தும் பச்சை பொய். அவர்கள் நீதிமன்றத்திற்கே செல்லவில்லை. நீதிமன்றத்தை நாடியிருந்தால் நிச்சயம் வெளியில் தெரிந்திருக்கும்.

இருவரும் ஒரே ஹோட்டலில் இருந்து பிரிவதாக டிவிட்டரில் தெரிவித்தார்கள். இதுவரை நீதிமன்றத்தில் விவாகரத்து கேட்டு கோர்ட்டுக்கு செல்லவில்லை. உணர்ச்சிவசப்பட்டு முடிவு எடுத்தார்கள் தற்போது உணர்ச்சி பூர்வமாக இணைகிறார்கள் ரஜினிகாந்தும் விட்டுப்பிடித்தார். இந்த சமூகம் நம் குழந்தைகளை எப்படி பார்க்கும் என்பது ஐஸ்வர்யாவுக்கும் தனுஷுக்கும் தெரியும்.

இருவருமே படித்தவர்கள், இருவருக்குமே குடும்ப பாசம் தெரியும். குழந்தைகள் மனதில் இருந்த வடு காயமாவதை தடுத்துவிட்டார்கள் ஐஸ்வர்யாவு தனுஷும். ரஜினிகாந்த் வீட்டில் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. இருவரும் மீண்டும் ஒன்று சேர்ந்து வாழ வேண்டும். அத்தோடு இரு குடும்பத்தினரும் மகனும் மருமகளும் ஒன்றாக வாழ்வதைதான் விரும்புகிறார்கள். இருவரும் நிச்சயம் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள். நல்ல நடிகரான தனுஷ், நல்ல அப்பா, நல்ல கணவர், நல்ல மருமகன் என்ற பெயரையும் எடுப்பார் என்பது உறுதி என தெரிவித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.

Advertisement

Advertisement

Advertisement