• Apr 27 2024

கைதாகும் தீபா? கடைசி நொடியில் கார்த்திக் எடுத்த முடிவு - இன்றைய எபிசோட் அப்டேட்

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

ரசிகர்களுக்கு ஏத்தாற்போல பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றது.இந்நிலையில் ஜீ தமிழில் ஒளிபரபரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் இன்றைய எபிசோட்டில் என்ன நடக்கின்றது என்பதை பார்ப்போம்.

கார்த்திக் தீபாவின் கழுத்தில் தாலி கட்டிய பிறகு அவளை ஐஸ்வர்யாவும் நட்சத்திராவும் திட்டி தீர்க்கின்றனர். எனினும் அந்த சமயத்தில் போலீசார் துறையை கைது செய்து மண்டபத்திற்கு அழைத்து வருகின்றனர். துரை தீபாவை பார்த்து எல்லாமே இவள் சொல்லித்தான் செய்தேன் என்கின்றான். மேலும் அங்கெ இருந்த கதிரும் தீபா சொல்லித்தான் எல்லாமே செய்தேன் என்கின்றான். இதைக்கேட்ட ஐஸ்வர்யா தீபாவை கைது செய்யும் படி சொல்கின்றாள். இந்நிலையில் கார்த்திக் தீபா இப்போ என்னுடைய மனைவி ,இது எங்கள் குடும்ப விஷயம் ,நாங்களே பேசி சரிசெய்து கொள்கின்றோம் என்கின்றான்

 ஐஸ்வர்யாவும் நட்சத்திராவும் தீபாவை திட்டி கொண்டிருக்க அந்த சமயம் போலீஸ் துரையை கைது செய்து அழைத்து வர அவன் இது வரைக்கும் நான் செய்த எல்லாமே தீபா சொல்லி தான் செய்ததாக பழி போட கார்த்திக் குழப்பம் அடைகிறான்.

எனினும் அதனை தொடர்ந்து கதிர் அந்த கூட்டத்தில் இருந்து தப்பிக்க முயற்சி செய்ய அருண் அதனை பார்த்து அவனை பிடித்து நிறுத்த அவனும் கொலை முயற்சி உட்பட எல்லாமே தீபா சொல்லி தான் செய்தேன் என்று சொல்கிறான். தீபாவுக்கு நட்சித்திராவை கெட்டவளாக சித்தரித்து கார்த்தியை கல்யாணம் செய்து சொத்துகளை அடைய வேண்டும் என்பது தான் அவளது ஆசை என சொல்கிறார்கள்.

அதற்கு அடுத்ததாக ஐஸ்வரியாவும் நட்சத்திராவும் போலீஸ் இருக்காங்க, அவங்க கிட்ட தீபாவை பிடித்து கொடுத்து விடலாம், தாலியை கழட்டி கொடுத்துட்டு போகட்டும் என்று சொல்ல மைதிலி முதல் முறையாக தீபாவுக்கு சப்போர்ட் செய்து பேச தொடங்க குறுக்கிடும் ராஜ ஸ்ரீ தீபா இப்படி செய்திருக்க வாய்ப்பிருக்கு என அவளும் பழியை தூக்கி போடுகிறாள்.

அத்தோடு தீபா எனக்கும் இதுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என சொல்ல ஐஸ்வர்யா அதனை நம்ம மறுக்கிறாள். போலீசில் பிடித்து கொடுத்து விடலாம் என கூற கார்த்திக் இப்போ அவள் கழுத்தில தாலி கட்டி இருக்கேன், அவ என்னுடைய மனைவியாகி விட்டாள், இனிமே இது எங்க குடும்ப பிரச்சனை.

போலீஸ் வரைக்கும் போனால் அது எங்களுக்கு தான் அசிங்கம், இதை நாங்களே பேசி தீர்த்து கொள்கிறோம். சிவா வந்தால் தான் உண்மை தெரிய வரும் என கூறுகிறார்.அதோடு உடனடியாக அம்மா அபிராமியை சென்று பார்க்க வேண்டும் என முடிவெடுக்கிறான்.இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகின்றது.

Advertisement

Advertisement

Advertisement