• Mar 09 2026

கார்த்தி நடிக்கும் ‘வா வாத்தியார்’ படத்திற்கு ஏற்பட்ட சிக்கல்.. நீதிமன்றம் அதிரடி உத்தரவு

shali / 3 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனது திறமையான நடிப்பால் வித்தியாசமான இடத்தை பிடித்துள்ள நடிகர் கார்த்தி, சமீபத்தில் நலன் குமாரசாமி இயக்கத்தில் ‘வா வாத்தியார்’ படத்தில் நடித்துள்ளார். இதில் ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடித்ததுடன், முக்கிய கதாபாத்திரங்களில் சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 


இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் பணியாற்றியுள்ளார். படத்தை தயாரித்துள்ள ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் இப்படத்தின் வெளியீடு குறித்து எதிர்பார்ப்பில் உள்ளது.

அப்படம் வருகின்ற டிசம்பர் 12-ம் தேதி வெளியீடு ஆகும் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால் சமீபத்தில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு, படத்திற்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கு அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவர் தாக்கல் செய்த மனுவால் ஆரம்பிக்கப்பட்டது. மனுவில் அவர் கூறியதாவது, ஸ்டூடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனம் ரூ. 10 கோடியே 35 லட்சம் அவரிடம் கடனாக பெற்றுள்ளது. இந்த கடன் செலுத்தப்படும் வரை, படத்தை வெளியிட தடை விதிக்கவும்.


படத்திலிருந்து கிடைக்கும் வருவாய் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட வேண்டும். இந்த மனு மீது, நீதிபதி இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார், அதனால் படத்தின் திட்டமிடப்பட்ட வெளியீடு தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது. 

வழக்கின் அடுத்த கட்ட விசாரணையில், படத் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இப்படத்தின் கடன் தொடர்பான பதிலை நாளைக்குள் நீதிமன்றத்தில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம், பட வெளியீட்டு திட்டங்கள் இன்னும் குழப்பமடையக்கூடும். 

Advertisement

Advertisement