• May 08 2024

மறுபடியும் ட்விட்டரில் சர்ச்சை பதிவை இட்ட சின்மயி..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல பின்னணி பாடகியான சின்மயி இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் முதல் முன்னணி இசையமைப்பாளர்கள் பலரின் இசையில் பாடியுள்ளார்.

மேலும் இவரது குரலுக்கேன்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் சின்மயி, தன்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் சர்ச்சையில் கிளப்பியுள்ளது.

ஹாலிவுட்டில் தொடங்கிய மீ டூ விவகாரம் பாலிவுட், டோலிவுட்டைத் தாண்டி, கோலிவுட் வரை பல அதிர்வலைகளை கிளப்பியது. மேலும் ட்விட்டரில் ட்ரெண்டான METOO ஹேஷ்டேக் மூலம் ஏராளமான நடிகைகள் திரையுலகில் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகள் பற்றி தகவல்கள் பகிர்ந்து இணையத்தில் பரபரப்பை கிளப்பினார்கள். அப்படி தமிழ் திரையுலகில் மிகப்பெரிய சர்ச்சைகளை ஏற்படுத்திய சம்பவம் பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து விவகாரம்.

வைரமுத்து பற்றி தொடர்ச்சியாக குற்றச்சாட்டை சுமத்தி வருகின்றார் சின்மயி. அத்தோடு ராதாரவி குறித்தும் விமர்சனம் செய்து வருகின்றார். இந்நிலையில் ஒரு பெண், ஆண்களை தெரு நாய்களுடன் ஒப்பிட்டு பேசிய காணொளி வைரலாகிய நிலையில் அதற்கு பிரியாணிமேன் என்பவர் அளித்த பதிலை விமர்சனம் செய்துள்ளார் சின்மயி.

பிரியாணிமேனை விமர்சனம் செய்த சின்மயி, ஆண்களை தெரு நாய் என்று கூறிய பெண்ணை ஏன் விமர்சனம் செய்யவில்லை என நெட்டிசன்கள் கேள்வி கேட்டனர். எனினும் அதற்கு பதிலளித்த சின்மயி, ’பொதுவாக மனிதர்களை விட நாய்கள் நம்பகமானவர்களாக இருக்கின்றார்கள் என்றும், என்னைப் பொருத்தவரை ராதாரவி மற்றும் தமிழ் கவிஞர் ஆகிய இருவருடன் ஒரு அறையில் இருப்பதை விட தெரு நாய்களுடன் பாதுகாப்பாக இருப்பேன்’ என்று தெரிவித்துள்ளார். அவரின் இந்த பதிவு பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement