• Apr 27 2024

கோபத்தில் செல்லம்மா செய்த செயல் -பதறி அடித்து ஓடிய சித்து -வெளியானது வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் இந்த ஆண்டு பல சீரியல்கள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது.அந்த வகையில் இதில் ஆரம்பித்த சில நாட்களிலேயே ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்ட சீரியல் தான் செல்லம்மா.

இந்த சீரியலில் கதாநாயகியாக இருக்கும் செல்லம்மா கணவன் துணை இல்லாமல் தனது பெண்ணை சிறப்பாக வளர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு வாழ்க்கையை நடத்தி வருகின்றார்.

இதில் செல்லம்மாவை காதலித்து வருகின்றார் வீட்டு முதலாளி சித்து.இந்த விடயம் செல்லம்மாவிற்கு தெரியவர எத்தனையோ தடவை இது..சரிப்பட்டு வராது நீங்கள் மேகா அம்மாவை திருமணம் செய்ய சம்மதியுங்கள் என கூறுகின்றார்.

இதனைக் கேட்காத சித்து..இல்லை நான் உங்களைத் தான் திருமணம் செய்வேன் என உறுதியாக நிற்கின்றார்.நான் திருமணம் ஆன பொண்ணு எனக் கூறியும் கேட்க மறுக்கின்றார் சித்து.எத்தனை தடவை கூறியும் கேட்காத சித்துவால் திடீரென அவர்களின் வீட்டை விட்டுட்டு தனது ஊருக்கு யார்கிட்டையும் சொல்லாமல் கிளம்புகின்றார் செல்லம்மா.

இதனை உடனே செல்லம்மாவின் மகளான மலர் சித்துவிற்கு போன் செய்து கூறிவிட சித்து பதறி அடித்து ஒவ்வொரு பஸ்ஸாக ஆக தேடுகிறார்.இதனை அறிந்த செல்லம்மா தனது முந்தானைப்புடவையால்  தனது முகத்தை மறைத்து கிளம்பி விடுகின்றார்.

இவ்வாறுஇருக்கையில் சித்து அந்த பஸ் பின்னாலே செல்லம்மா எனக் கூறிக் கொண்டு ஓடுகின்றார்.இத்துடன் இன்றைய ப்ரமோ நிறைவடைகின்றது.

இதோ அந்த ப்ரமோ...



Advertisement

Advertisement

Advertisement