• Apr 27 2024

மாரி சொன்னபடி நேரில் வந்த தேவி துப்பாக்கியால் சுட்ட சங்கர பாண்டி- மாரி சீரியல் அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

ஷு தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் தான் மாரி.அந்த வகையில் இன்றைய எப்பிஷோட்டில் என்ன நடந்தது என்று பார்ப்போம். மாரி பூஜை செய்து முடிக்க காற்று அடிக்க தேவி தோன்றி படிக்கட்டில் இறங்கி வர அனைவரும் கண்ணாடியை பார்த்தபடி இருக்க சங்கர பாண்டியன் கண்ணாடியை பார்த்தபடி இருக்க தேவி கண்ணாடி அருகே வர சங்கரபாண்டி துப்பாக்கியால் கண்ணாயை சுட்டு நொறுக்குகிறான்.

இதனால் கண்ணாடியில் தேவி தெரியாமல் போக தாரா நீ செய்த பூஜையால் தேவியம்மா வர விருப்பம் இல்லாமல் கண்ணாடியை உடைத்து விட்டார்கள் என்று மாரி மீது பழி போடுகிறாள். மீண்டும் நீ சொன்ன விஷயத்தில் தோற்று விட்டாய் உடனே வீட்டை விட்டு வெளியேறு என்று அவளை வெளியே அனுப்ப அப்போது சூர்யா நான் தேவியம்மாவை பார்த்ததாக சொல்வது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுக்கின்றது.

அடுத்து தாரா பொய் சொல்லாதே என்று சொல்ல ஆமாம்மா தேவி அம்மா வந்தாங்க நான் பார்த்தேன் என்று சூர்யா சொல்ல தாரா நம்ப மறுக்கிறாள்.  இறுதியில் தாரா வந்ததாகவே வச்சிக்கிட்டோம் என்ன பொறுத்தவரைக்கும் தேவி அம்மா இங்கே எல்லார் கண்ணுக்கும் வரல ஒன்னு மாரி இந்த வீட்டை விட்டு வெளியே போகணும். இல்லனா நீ ஜாஸ்மினை திருமணம் பண்ணிக்கணும் எது ஓகே? அதை மட்டும் சொல்லு என்று சொல்ல சூர்யா கல்யாணத்துக்கு சம்மதம் சொல்ல தாரா எனக்கு இது போதும் மாரி இனி இந்த வீட்டில் இரு என்று சொல்லிவிட்டு போகிறாள்.


அடுத்து தாரா ரூமில் ஜாஸ்மின் சங்கர பாண்டிய மட்டும் சுடாம இருந்தா கண்டிப்பா மாரி வீட்டை விட்டு வெளியே போயிருப்பா நீங்க தேவையில்லாம சுட வச்சுட்டீங்க தேவி அம்மா எல்லாம் வர மாட்டாங்க என்று சொல்ல அரவிந்த் இல்ல கண்டிப்பா வந்தாங்க என்று சொல்ல அனைவரும் அதிர்ச்சியாகின்றனர். அப்போது தன் செல்போனில் ரெகார்ட் செய்ததை காட்ட அதில் தேவி அம்மா படிக்கட்டில் இறங்கி வருவதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி  அடைகிறார்கள்.உடனே தாரா நல்ல வேலை சங்கரபாண்டிய துப்பாக்கியால் சுட சொன்னது நல்லதா போச்சு என்று சொல்கிறாள்.

இந்த பக்கம் சூர்யா பீல் செய்தபடி இருக்க மாரி வந்து பாத்தீங்களா தேவி அம்மா வந்தாங்க உங்க கண்ணுக்கு தெரிஞ்சதா என்று கேட்க ஆமா என்று சொல்லிவிட்டு தேவி அம்மா படம் முன்பு என்னை மன்னிச்சிருங்கமா, நான் உங்களைப் பார்க்கல ஆனால் மாரியை காப்பாத்தறதுக்கு எனக்கு வழி தெரியல அதனாலதான் பொய் சொன்னேன் என்று வேண்டுகிறான். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்கப்போவது என்ன என்பது இனிவரும் எபிசோடுகளில் தெரியவரும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
































Advertisement

Advertisement

Advertisement