உள்ளாடை அணியாமல் மீரா ஜாஸ்மின் வௌியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவிவருகின்றது.
தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகிகளில் ஒருவராக வலம் வந்தவரே நடிகை மீரா ஜாஸ்மின். இவர் தமிழ், மலையாளம் எனப் பல மொழிகளிலும் பல கதாபாத்திரங்களில் ஒரு காலத்தில் சினிமாவையே கலக்கி இருந்தார். அதாவது குடும்பப் பெண்ணாகவும், காதல் நாயகியாகவும், கவர்ச்சிக் கன்னியாகவும் பல நிலைகளிலும் பல ரசிகர்களின் மனதில் இன்றுவரை இடம்பிடித்து நிற்கின்றார்.
பரட்டை என்கிற அழகு சுந்தரம், திருமகன், கஸ்தூரி மான, மெர்க்குரிப் பூக்கள், சண்டக்கோழி உள்ளிட்ட மனதை விட்டு அகலாத பல படங்களில் நடித்திருக்கின்றார். இப்படங்களில் இவர் நடிகர் விஷாலுடன் 'சண்டைக்கோழி' படத்தில் குறும்பானா நாயகியாக வந்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருந்தமை இன்றுவரை யாராலும் மறக்க முடியாது. இதனைத் தொடர்ந்து மாதவன் நடிப்பில் வெளியான 'ரன்' படத்திலும் வெகுளியான சேட்டை மிகுந்த பெண்ணாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருக்கின்றார்.
தமிழில் மட்டுமன்றி மலையாள சினிமாவிலும் பிஸியாக இருந்த இவர் திடீரென சினிமாவை விட்டு காணாமல் போய்விட்டார். அதாவது 2014 -ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட கையோடு சினிமா துறையில் இருந்து விலகிவிட்டார். இவ்வாறு இருக்கையில் சிறிது காலம் பிரேக் விட்டுட்டு மறுபடியும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் இவர் தனது புகைப்படங்களை அடிக்கடி ஷேர் செய்து வருவார்.இந்நிலையில் திடீரென மெலிந்த இவர் உள்ளாடை அணியாமல் கறுப்பு நிற ஆடையில் கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.இதற்கு ரசிகர்கள் பலரும் தமது லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
Listen News!