• May 09 2024

சர்ச்சைக்குரிய கருத்தினைப் பதிவிட்ட பிரபல நடிகை கைது- அதிர்ச்சியில் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

மஹாராஷ்டிர மாநிலத்தில் பிரபல நடிகை ஒருவர் திடீரென கைது செய்யப்பட்ட சம்பவம் குறித்து பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. அதாவது நடிகை கேத்தகி சித்தலே என்பவர் முன்னாள் மத்திய அமைச்சரும், தேசியவாத காங்கிரச் கட்சி தலைவருமான சரத்பவார் குறித்து, தனது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்று போட்டிருந்தார்.

இதில் நீங்கள் பிராமணர்களை வெறுக்கிறீர்கள்.உங்களுக்கு நரகம் காத்திருக்கிறது. என சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டிருந்தார். இதையடுத்து, தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள் நடிகைக்கு எதிராகப் புகார் அளித்தனர்.

எனவே இணையவழி குற்றத் தடுப்புபிரிவு போலீஸார் நடிகை கேத்தகி சித்தலே மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர், எனவே அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க நேற்று நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனை அடுத்து போலீஸார் கோர்டில் ஆஜர்படுத்தினார்கள். இதனால் அவரை வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, நடிகை கேத்தகி சித்தலே சிறையில் அடைக்கப்பட்டார். நடிகை சார்பில் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement