• May 01 2024

பிரம்மன் வடித்த காவியம் நீயடி என் செல்ல மகளே- விஜய் டிவி நடிகர் புகழின் மகளுக்கு என்ன பெயர் தெரியுமா?

stella / 6 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக ரசிகர்களை சிரிக்க வைத்து வந்த புகழ் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்துள்ளார். ரியாலிட்டி ஷோ மூலமாக கிடைத்த பிரபலத்தை வைத்து புகழ் சினிமாவிலும் காமெடி நடிகராக கலக்கி வருகிறார்.

பென்ஸி என்பவரை காதலித்து வந்த புகழ் பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்ட புகழுக்கு அண்மையில் பெண் குழந்தையும் பிறந்தது இந்நிலையில், அந்த குழந்தைக்கு பெயர் சூட்டும் விழா நடத்திய நிலையில், குழந்தையின் பெயரை அறிவித்துள்ளார். 


 "இரு முறை தாய் வாசம் தெரிய வேண்டுமெனில் பெண் பிள்ளையை பெற்று எடுக்க வேண்டும் என்பார்கள். என் தாரத்தின் மூலமாக எனக்கு கிடைத்த மற்றொரு தாய் என் மகள், மகள் அல்ல, எங்கள் மகாராணி பிறந்திருக்கிறாள்.. என்மகளே ...தாயும் சேயும் நலம்" என கடந்த செப்டம்பர் 27ம் தேதி பதிவிட்டு தான் தந்தையான சந்தோஷத்தை கொண்டாடி இருந்தார் புகழ்.

 இந்நிலையில், தனது மகளுக்கு ரித்தன்யா என பெயர் சூட்டியுள்ள புகழ் அது குறித்து இன்ஸ்டாகிராமில் போஸ்ட் போட்டு அறிவித்துள்ளார். "என் வாழ்வை புன்னகையால் இன்புறச் செய்ய தவமாய் கிடைத்த அழகியடி நீ.. கம்பன் இன்றிருந்தால் உனக்கென தனிக்கவிதையே வடித்திருப்பானடி... ஊரே கண் வைக்கும் அளவிற்கு, பிரம்மன் வடித்த காவியம் நீயடி என் செல்ல மகளே... கவிதைக்கு தனிப்பெயர் தேவையில்லை..., இருந்தாலும், எங்கள் வாழ்வை வசந்தமாக்கிய எங்கள் தேவதை தனித்து தெரியவே, இன்று முதல் நீ, பு.ரித்தன்யா என்று அழைக்கப்பட இருக்கிறாய் அன்பு மகளே..


எங்களின் மகாராணிக்கு பு.ரித்தன்யா என்ற பெயரை வைத்துள்ளோம் என்பதை என் அன்பு உறவுகளுக்கு தெரிவித்து கொள்கிறேன்" என பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் பலரும் வாழ்த்துத் தெரிவிதது வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement