• May 04 2024

அந்த விஷயத்தில சூர்யா,தனுஷ் இரண்டு பேருமே பெஸ்ட் தான்- வெளிப்படையாகப் பேசிய சாய்பல்லவி

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை சாய் பல்லவி மலையாளத்தில் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன பிரேமம் என்கிற திரைப்படம் மூலம் நடிகையாக காலடி எடுத்து வைத்தார். இப்படத்தில் மலர் என்கிற டீச்சர் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சாய் பல்லவி, தன் யதார்த்த நடிப்பாலும், அழகாலும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

 பிரேமம் படத்தில் மூன்று ஹீரோயின்கள் நடித்திருந்தாலும், அதில் மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவிக்கு தான் அதிகளவில் பாராட்டுக்கள் கிடைத்தன.பிரேமம் படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் தியா என்கிற திரைப்படம் மூலம் அறிமுகமான சாய்பல்லவி. அடுத்தடுத்து தனுஷ் உடன் மாரி 2, சூர்யாவுக்கு ஜோடியாக என்.ஜி.கே போன்ற படங்களில் நடித்தார்.


 இந்த இரண்டு படங்களும் பிளாப் ஆனதால், டோலிவுட் பக்கம் சென்ற சாய் பல்லவிக்கு அங்கு அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களாக அமைந்தன. இதனால் குறுகிய காலத்திலேயே தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக உயர்ந்தார் சாய் பல்லவி.


இந்த நிலையில் பிரபல சேனலுக்கு பேட்டியளித்திருந்தார்.. அதில் ப்ஃரண்லியாக பழகுறவங்க என்றால் துல்கர் சல்மானும் நிவினும் நல்லா பழகுவாங்க எல்லார் கிட்டையும் பேசுவாங்க. எனக்கு சினிமாவில் நிறைய விஷயங்ளை கற்றுக் கொடுத்தவங்க என்றால் சூர்யா மற்றும் தனுஷ் சேரை சொல்லுவேன். அவங்க இரண்டு பேரும் அவங்க படத்தில் நடிக்கும் போது நிறைய விஷயங்கள் எனக்கு சொல்லி இருக்கிறாங்க. அவங்க அந்த சீன்ல இல்லாட்டியும் கூட என்னால பண்ண முடியும் என்று சொல்லுவாங்க என்று தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement