• Sep 17 2024

சூர்யா ரசிக்கக்கூடிய கெட்டவன்.. இதுக்கு மேல சொன்னா செருப்படி: பிக்பாஸ் அபிஷேக்

Sivalingam / 1 month ago

Advertisement

Listen News!

'சூர்யா 44’ திரைப்படத்தில் ஒரு ரசிக்கக்கூடிய கெட்டவன் கேரக்டரை கார்த்திக் சுப்புராஜ் உருவாக்கி உள்ளார் என்றும் ரசிக்க கூடிய அளவில் லொகேஷன் இருக்கும் என்றும் இதற்கு மேல் இந்த படத்தை பற்றி நான் சொன்னால் கார்த்திக் சுப்புராஜ் என்னை செருப்பால் அடிப்பார் என்று பிக்பாஸ் அபிஷேக் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் 'சூர்யா 44' படத்தின்  முதற்கட்ட படப்பிடிப்பு அந்தமான் தீவுகளில் முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது ஊட்டியில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தின் கதை என்னவென்று இதுவரை கசியாத நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளரும் திரைப்பட விமர்சகருமான அபிஷேக் சமீபத்தில் அளித்த பேட்டியில் இந்த படத்தின் கதை குறித்து சில விஷயங்களை கூறியுள்ளார்.



கார்த்திக் சுப்புராஜ் சூர்யாவின் கேரக்டரை ஒரு ரசிக்கக்கூடிய கெட்டவன் என வடிவமைத்துள்ளார் என்றும் இந்த கேரக்டரை இதுவரை தமிழ் சினிமாவில் இல்லாத அளவுக்கு புதுமையாக இருக்கும் என்று தெரிவித்தார். அது மட்டும் இன்றி அழகான லொகேஷன்களில் படமாக்கப்பட்டு உள்ளதாகவும் நீங்கள் எல்லோரும் இந்த படத்தை பார்க்கும்போது ஒரு புது அனுபவத்தை உணர்வீர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால் அதே நேரத்தில் இந்த படத்தை பற்றி இன்னும் சொன்னால் என்னை செருப்பால் அடிப்பார் என்றும் நீங்களே இந்த படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அபிஷேக்கின் இந்த பேட்டியை அடுத்து இந்த படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர்.  சந்தோஷ் நாராயணன் இசையில்,   ஜாக்சன் கலை இயக்கத்தில், பிரவீன் ராஜா காஸ்ட்யூம் டிசைனில், ஜெயிக்கா ஸ்டண்ட் இயக்கத்தில்  சபிக் முகமது அலி படத்தொகுப்பில் ஸ்ரேயா கிருஷ்ணா ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகவுள்ளது.  மேலும் இந்த படத்தை  2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

Advertisement

Advertisement