• May 10 2024

பிக்பாஸ் பெண் பிரபலத்திற்கு கொலை மிரட்டல்... அவரே வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்... ஷாக்கில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்தி திரையுலகில் பிரபல நடிகை, மாடல், பிக்பாஸ் பிரபலம் மற்றும் ராப் பாடகர் என பன்முக தன்மை கொண்ட ஒருவராகத் திகழ்ந்து வருபவர் உர்வி ஜாவித். இவர் அடிக்கடி பல கவர்ச்சியான படங்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கி கொள்பவர். 

அந்தவகையில் பூக்கள், பழங்கள், காகிதங்கள் என எந்தவித பொருட்களையும் வீணாக போக விடாமல் அதனை ஆடையாக்கி அணிந்து, அவ்வாறு அரைகுறை உடையில் எடுத்த ஆபாச புகைப்படங்களை வலைத்தளத்தில் தொடர்ந்து வெளியிட்டு பலரின் கண்டனத்திற்கு ஆளாகி வருகின்றார்.


இதனையடுத்து உர்பி ஜாவித் மீது நடவடிக்கை எடுக்கும்படி பா.ஜ.க. மகளிர் அணியை சேர்ந்த சித்ரா வாக் என்பவர் கூட மும்பை போலீசில் புகார் அளித்து உள்ளார். அதுபற்றிய சம்மனுக்கு நேரில் ஆஜராகி உர்வி அளித்த பதிலளித்துள்ளார். அதாவது "நான் ஒரு இந்தியன், நான் விரும்பும் ஆடைகளை அணிய எனக்கு முழு உரிமை உள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டம் எனக்கு அந்த உரிமையை வழங்கியுள்ளது. எனது வேலைக்கு ஏற்ப இந்த ஆடைகளை அணிகிறேன்." என்றார்.

மேலும் "நான் போட்டோ ஷூட் நடத்தி வருகிறேன். சில சமயங்களில் வேலை நெருக்கடியில் உடை மாற்ற நேரம் கிடைக்காது. உடை மாற்றி கொள்ள நேரமில்லாததால், நான் அப்படியே வெளியே செல்வேன். அப்போதுதான் புகைப்பட கலைஞர்கள் வெளியே வந்து புகைப்படங்களை எடுக்கிறார்கள். அவை எல்லாம் வைரலாகின்றன" எனவும் கூறினார்.


அதுமட்டுமல்லாது "இப்போது வைரலாகி வரும் புகைப்படங்களை எப்படி நிறுத்துவது?" என போலீசாரே திகைக்கும்படி கேள்விகளை அடுக்கினார். அத்தோடு உர்வி ஜாவித் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட மற்றொரு பதிவில், கார் ஒன்றில் அமர்ந்தபடி, முக கவசம் அணிந்து வீடியோ ஒன்றை எடுத்து பகிர்ந்து உள்ளார். அதில் அவர் தனக்கு தீவிர உடல்நல பாதிப்பு உள்ளது எனவும், அதனுடனேயே காவல் நிலையத்திற்கு மீண்டும் வந்துள்ளேன் எனவும் கூறியுள்ளார். 

மேலும் "யாரோ சிலர் என்னை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு, துன்புறுத்த தொடங்கினர். எனது ஆடைகளுக்காக அவர்கள் என்னை தாக்க போகிறோம் என கூறினர். எனது கார் எண்ணும் கூட அவர்களுக்கு தெரிந்திருக்கிறது. நான் சோர்ந்து போய் விட்டேன்" எனவும் மிகவும் உருக்கமாக கூறியுள்ளார்.


மேலும் பிரபல இயக்குநரான நீரஜ் பாண்டேவின் அலுவலகத்திற்கு வரும்படி உர்வி ஜாவித்துக்கு ஒருவர் அழைப்பு விடுத்து உள்ளார். இதற்காக உர்பியை தொடர்பு கொண்ட அந்த நபர், தன்னை அவரது உதவியாளர் என அறிமுகப்படுத்தி கொண்டார். பின்னர் உர்வியிடம் அவர், சார் உங்களை பார்க்க வேண்டும் என விரும்புகிறார் என கூறியுள்ளார். ஆனால், உர்வி அதற்கு, சந்திப்புக்கு முன்பு இந்த பிராஜக்ட்டுக்கான அனைத்து விவரங்களையும் எனக்கு அவர் அனுப்ப வேண்டும் என கூறியுள்ளார். 

அதனை கேட்ட அந்த உதவியாளர் மிகுந்த ஆத்திரமடைந்து உள்ளார். எவ்வளவு தைரியம் உனக்கு..? நீரஜ் பாண்டேவையே எப்படி அவமதிக்க போச்சு..? என்று கேட்டுள்ளார். அந்த நபர், உர்வியின் கார் எண்ணும் தனக்கு தெரியும் என கூறியதுடன், உர்வி அணியும் ஆடை வகைக்காக அவர் அடித்து கொல்லப்பட தகுதியானவர் எனவும் கூறி உர்வியை மிரட்டியுள்ளார். 

இவ்வாறாக தனக்கு வந்த கொலை மிரட்டல் பற்றி நடிகை உர்வி ஜாவித் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement