• May 18 2024

திடீரென விவாகரத்து செய்து கொள்ளும் பிக்பாஸ் பிரபலம்... ஏன் இந்த முடிவு... அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் மொழியில் ஒளிபரப்பாகும் பிரபலமான சேனல்களில் ஒன்று விஜய் டீவி. இவ் டீவி ஆனது பல சாதாரணமக்களை கூட பிரபலங்களாக மாற்றியிருக்கின்றது. இதில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் அனைத்திற்கும் ஏராளமான ரசிகர் கூட்டிடம் உண்டு. அவ்வாறான நிகழ்ச்சிகளில் ஒன்றே 'பிக்பாஸ்'.


இந்நிகழ்ச்சியானது 5 சீசன்களை வெற்றிகரமாக கடந்திருக்கின்றது. அந்த வகையில் பிக் பாஸ் 2ம் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்ட ஒருவரே வைஷ்ணவி. இவர் சாவி சா.விஸ்வநாதனின் பேத்தி என்பது யாவருக்கும் தெரிந்த ஒன்றே. ஆரம்பத்தில் RJ வாக பணியாற்றி வந்த வைஷ்ணவி பிக் பாஸ் மூலமாக மக்கள் மத்தியில் அதிகம் பாப்புலர் ஆனார். அதன் பின் அவரது நீண்ட நாள் காதலர் அஞ்சன் என்பவரை திருமணம் செய்து கொண்டு லைப்பில் செட்டில் ஆகினார்.



இவரின் கணவனான அஞ்சன் விமான பைலட் ஆக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது. கடந்த பல வருடங்களாக அவர்கள் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வந்தனர். 



இந்நிலையில் திருமணமாகி கடந்த ஆறு வருடமாக ஒன்றாக இருந்த அவர்கள் தற்போது பிரிவதாக அறிவித்து இருக்கின்றனர். இதை வைஷ்ணவியே தனது ட்விட்டர் பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றின் மூலமாக கூறி இருக்கிறார். மேலும் அப்பதிவில் "நாங்கள் நண்பர்களாக தொடர்வோம், மோசமான விஷயம் எதுவும் நடைபெறவில்லை, ஆனால் நாங்கள் நண்பர்களாக மட்டும் இருப்பது தான் சரியாக இருக்கும் என இருவருமே முடிவெடுத்திருக்கிறோம்" எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.


அத்தோடு "எங்களுக்காக வருத்தப்படாதீர்கள், நீங்கள் பிரிவதற்காக வருத்தப்படவில்லை. துரதிஷ்டவசமாக சூழ்நிலை எங்களுக்கு சரியாக இல்லை. அவருக்கு என் மனதில் எப்போதும் ஒரு இடம் இருக்கும்" எனவும் கூறி இருக்கிறார். வைஷ்ணவியின் இந்தப் பதிவானது அவரின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது.

Advertisement

Advertisement