• May 05 2024

கெட்டவன் தான் நிஜ வாழ்க்கையில் ஜெயிக்கிறான்- மகாநதி சீரியல் நடிகரின் இன்டர்வியூ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 1990களில் இருந்தே நடித்த வரும் நடிகர் தான் சரவணன்"பொண்டாட்டி ராஜ்ஜியம்", "தாய் மனசு" உள்ளிட்ட ஏராளமான படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தார். அண்மையில் சாய் பல்லவி நடிப்பிலான கார்கி படத்தில் நடித்திருந்தார். இதேபோல் எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் அடுத்து வெளியாகவுள்ள நான் கடவுள் இல்லை என்ற படத்தில், சரவணன் நடித்துள்ளார்.

இதற்கிடையே சில ஆண்டுகள் எந்த படங்களிலும் தோன்றாமல் இருந்து வந்த சரவணன், கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியான பருத்தி வீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். அமீர் இயக்கத்தில் உருவாகி இருந்த இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி நாயகனாக அறிமுகமாக இருந்தார். கார்த்தியின் முதல் படமே மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்று ஒட்டுமொத்த திரை உலகையும் திரும்பி பார்க்கவும் வைத்திருந்தது. இது தவிர பிக்பாஸிலும் சரவணன் கலந்துகொண்டார்.


இந்த நிலையில் நடிகர் சரவணன் தற்போது பிரபல சேனலுக்கு பிரத்தேக பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் தன்னுடைய சினிமா பயணங்கள் குறித்தும், தான் நடித்த கதாபாத்திரங்கள் குறித்தும் பேசி இருந்தார். இதில் பேசிய நடிகர் சரவணன், “இத்தனை வருடம் சினிமாவில் இருந்திருக்கேன், ஆனால் பருத்திவீரன் படத்தில்தான் நான் ஆழமாக என் நடிகனாக பதிவு செய்தேன். இதேபோல் நான் எஸ்.ஏ.சந்திரசேகர் சாரின் நான் கடவுள் இல்லை படத்துல நடிச்சிருக்கேன், நல்ல கேரக்டர் கூப்பிடுவார்னு நெனைச்சேன்.


கெட்டவன் தான் நிஜ வாழ்க்கையில் ஜெயிக்கிறான், இதில் நான் கெட்டவனாக நடிக்க வேண்டும் என்றார். அவர் ரொம்ப நாள் அழைத்துக்கொண்டே இருந்தார். இதில் நடித்துள்ளேன், இந்த படத்தில் என் நடிப்பு பேசப்படும். இந்த படம் ராவாக வந்திருக்கிறது. இந்த படத்தில் டப்பிங் பேசும்போது என்னை பார்த்தே நான் பயந்தேன். அந்த அளவுக்கு நடிக்க வைத்துள்ளார்.” என குறிப்பிட்டுள்ளார்.மேலும் இவர் விஜய் டிவியில் புதிதாக ஆரம்பித்துள்ள மகாநதி சீரியலில் நடித்து வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement