• May 18 2024

பாபா செல்லத்துரையால் 5 நிமிடத்திற்கு மேல் ஒரு இடத்தில் இருக்க முடியாது-பிரபல சீரியல் நடிகை சொன்ன தகவல்

stella / 7 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பிரபல எழுத்தாளராக வலம் வருபவர் தாக் பாவா செல்லத்துரை.இவர் ஜெயம் ரவியின் பூலோகம், குரு சோமசுந்தரத்தின் ஜோக்கர், மக்கள் செல்வனின் சீதக்காதி, மம்மூட்டியின் பேரன்பு உள்ளிட்ட பல நல்ல திரைப்படங்களில் நடித்துள்ளார். இவர்  "எல்லா நாளும் கார்த்திகை", டொமினிக் உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியுள்ளார்.

மேலும் இவர் தற்பொழுது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியிலும் பங்குபற்றினார்.  நிகழ்ச்சி துவங்கிய 10 நாட்களுக்கு பின்னர் நெஞ்சுவலிப்பதாகச் சொல்லி பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.இந்நிலையில் அண்மையில் பேட்டியளித்த பிரபல சீரியல் நடிகை ரேகா நாயார் பாவா செல்லத்துரை குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.


அதில் "பாவா பரபரப்பாக இயங்கக்கூடிய மனிதர், அவரால் 5 நிமிடத்திற்கு மேல் ஓரிடத்தில் அமர்ந்து பேச முடியாது. ஒருவேளை பிரதமரோடு அமர்ந்து பேசுவதற்கான வாய்ப்பு செல்லதுரைக்கு கிடைத்தாலும் கூட, அவரால் பிரதமருடன் 5 நிமிடங்களுக்கு மேல் அமர்ந்து பேச முடியாது. நான் அவரை பல பெரிய மனிதர்களோடு அமைந்து பேசுவதை கண்டிருக்கிறேன், எங்கு சென்றாலும் ஐந்து நிமிடங்களுக்கு மேல் ஒரு இடத்தில் உட்கார மாட்டார்". 

"பரபரப்பாகவே இயங்கும் ஒரு மனிதர் அவர், பிக் பாஸ் வீட்டுக்குள் அவர் நூறு நாட்கள் தங்கப் போகிறார் என்று தனக்கு தெரியவில்லை என்று அவர் கூறியிருந்தார்". ரேகா நாயர் பேட்டியில் இந்த விஷயத்தை பேசிய வெகு சில நாட்களில் பாபா செல்லதுரை அவர்கள் பிக் பாஸ் வீட்டிலிருந்து தானாக முன்வந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement