• May 03 2024

செழியன் ஒரு பெண்ணுடன் இருப்பதைக் கண்டு பிடித்த பாக்கியா- நக்கலாகப் பேசிய கோபி- Baakiyalakshmi Serial

stella / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

வெளியில் சென்ற அமிர்தாவும் எழிலும் வீட்டுக்கு திரும்பி வருகின்றனர். இப்போது எழில் தாங்கள் வெளியில் சாபபிட்டு விட்டதாகவும் நீங்க சாப்பிட்டீங்களா என்றும் கேட்கின்றார். அப்போது பாக்கியா தானும் சாப்பிடடு விட்டதாகவும் நிலா துாங்கிட்டாளா என்றும் கேட்கின்றார். இதனால் அமிர்தா நிலாவை துாங்க வைக்க கொண்டு போகின்றார்.


தொடர்ந்து எழில் பாக்கியாவை ஆறுதல்ப்படுத்துகின்றார். வீட்டுக்கு பணம் தேவை என்பதைப் பற்றி கவலைப்படாதம்மா நான் இருக்கிறேன் எல்லாம் சீக்கிரம் சரி ஆகிடும் என்கின்றார். தொடர்ந்து கணேஷ் அமிர்தாவைத் தேடிப் போனதால் அவருடைய பெற்றோர் என்ன செய்வதென்று தெரியாமல் யோசிக்கின்றனர்.

அத்தோடு அமிர்தாவிடம் இந்த பிரச்சினையை சொல்லலாமா வேண்டாமா என்று யோசிக்கின்றனர். பின்பு செழியன் மாலினியுடன் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது பாக்கியா போன் பண்ணுகின்றார். அப்போது பாக்கியா செழியனிடம் எங்கிருக்கிறாய் என்று கேட்க ஆபிஸில் தான்இருக்கிறேன் என்று சொல்கின்றார்.


அப்போது மாலினி வந்து தண்ணீர் வேண்டுமா என்று கேட்க அது பாக்கியாவுக்கு கேட்டு விட பாக்கியா, செழியனை உடனடியாக வீட்டுக்கு வரச் சொல்லி விடுகின்றார். அப்போது செழியனும் வீட்டுக்கு வந்து விட பாக்கியா உனக்கு என்று  ஒரு பொண்டாட்டி இருக்கிறா குழந்தை வரப்போகுது அதெல்லாம் மறந்திடாத,நான் கேள்வி கேட்காமல் விட்டு தான் இப்பிடி ஆச்சு, நீ மூத்த பையன் உன்னுடைய கடமைகளை மறந்திடாத என்று திட்டுகின்றார்.


இருந்தாலும் செழியன் தான் தப்பு எதுவும் பண்ணல என்று சமாளித்து விட்டு அந்த இடத்தை விட்டுப் போகின்றார். தொடர்ந்து பாக்கியா வீதியின் சென்று கொண்டிருக்கும் போது கோபி வந்து நக்கலடிக்கின்றார்.அப்போது பாக்கியா இப்படியே என்னோட நிலமை இருந்திடாது மாறும்  கண்டிப்பாக மாறும் என்கின்றார். இதனால் காண்டீன் கைவிட்டுப் போயும் பாக்கியாவின் திமிர் மட்டும் குறையவில்லை என நக்கலாக சொல்லி விட்டு கோபி அந்த இடத்தை விட்டுப் போகின்றார். அப்போது பாக்கியா செல்வியுடன் நிற்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைகின்றது.




Advertisement

Advertisement

Advertisement