• Apr 26 2024

கமலை வயிறு குலுங்கிச் சிரிக்க வைத்த ஏடிகே- கதறி அழுத நிவாஷினி மற்றும் அசீம்- 21ம் நாளில் நடந்தது என்ன

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில்சூப்பர் ஹிட்டாக ஒடிக் கொண்டிருக்கும் ரியாலிட்ரி ஷோ தான் பிக்பாஸ் சீசன் 6. இந்த நிகழ்ச்சியானது ஆரம்பித்த நாளிலிருந்து சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கின்றது. அந்த வகையில் நேற்றைய தினமும் கமல்சேர் எப்பிஷோட் என்பதால் சுவாரஸியமாக ஒளிபரப்பாகியது.

அந்த வகையில் முதலில் ஆயிஷா தன்னை தனலக்ஷ்மியின் பிரச்சினையுடன் கமல் சேர்  கோர்த்து விட்டதாக அனைவரிடமும் கேட்டுக் கொண்டதற்கு விளக்கம் கொடுத்திருந்தார். அதற்கு ஆயிஷா கமலிடமே கோபப்பட்டுக் கொண்டு இருந்தார்.


தொடர்ந்து கமல் சேர் ஏடிகேவை ஒவ்வொரு ஹவுஸ்மேட்ஸ் மாதிரியும் வீட்டுக்குள் செய்த பொஃபோமன்ஸை திரும்ப செய்யும் படி கூற அவரும் அவர்களைப் போல நடித்துக் காட்டினார். தொடர்ந்து இதன் பின்னர் ஒருவரின் சொல் கேட்டு இந்த வீட்டில் செயற்படுவது யாரு என்று கேட்கும் போது அசீம் ,ராபேட் மாஸ்டரைக் கூறுகின்றார். பின்னர் கமல் சேரிடமும் தானாகவே மாக்கை வாங்கிக் கொள்கின்றார்.

தொடர்ந்து நுங்கை கொண்டு வந்து வைத்து விட்டு இந்த வீட்டில நோகாமல் நுங்கு சாப்பிடுபவர் யார் என்று கேட்கப்பட்டது.அதற்கு ஒவ்வொரு போட்டியாளரும் ஒவ்வொருவரைக் கூறியிருந்தார்கள். பின்னர் மகேஸ்வரி, அசீம் ,அசல் ஆகியோர் எலிமினேஷனில் இருந்தனர்.


இதில் முதலாவதாக மகேஷ்வரி சேஃவ் ஆகினார்.அதன் பின்னர் அசீம், அசல் ஆகியோரில் யார் வீட்டில இருப்பாங்க என்று மற்றவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அசல் தான் என்று கூறினார்கள். ஆனால் தனலக்ஷ்மி மட்டும் அசீம் தப்பு பண்ணியிருக்கிறார். அவருக்கு ஒரு சந்தர்ப்பம் கொடுத்தால் நல்லாக இருக்கும் என்று கூறினார். இதனைக் கேட்ட மக்களும் கைதட்டி அவருடைய கருத்தை வரவேற்றனர்.

அதன் பின்னர் அசல் வெளியேறியவுடன் அசீம் மற்றும் நிவாசினி கதறி அழ ஆரம்பித்து விட்டனர். அதன் பின்னர் கமல் சேர் கிட்ட போன அசலுக்கு அவருடைய வீடியோ போட்டுக் காட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஹவுஸ்மேட் அசல் வெளியேறியதற்கு நிவாஷினியுடன் நெருக்கமாக இருந்ததே காரணம் எனக் கூறிக் கொண்டு இருந்தனர்.இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைந்தது.

Advertisement

Advertisement

Advertisement