• May 04 2024

அட்லீஸ்ட் ஒரு ஆலமரத்தையாவது பிடுங்கி சண்டை போட்டிருக்கலாம்... PS-1 படத்தை கிண்டலடித்த ரசிகர்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் காலத்திற்கு காலம் எத்தனையோ படங்களும் வெளியாகிய வண்ணம் தான் இருக்கின்றன. அதில் ஒரு சில படங்கள் மட்டும் வெளியாகி எத்தனை வருடங்கள் ஆனாலும் நம் மனதை விட்டு நீங்காத அளவிற்கு இடம் பிடித்து விடுகின்றன.

மற்றும் சில படங்கள் வெளியாகுவதற்கு முன்பாகவே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை தூண்டி அவர்களின் மனங்களில் ஒரு தனி இடத்தை பிடித்து விடுகின்றன. அவ்வாறான படங்களில் ஒன்று தான் 'பொன்னியின் செல்வன்'. 


இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி உள்ள சோழர்களின் வரலாற்று படமான இப்படமானது வெற்றிகரமாக இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் அதிகாலையிலேயே வெளியானது. பொன்னியின் செல்வன் FDFSஐ ரசிகர்கள் தியேட்டரில் மேளம் அடித்தும் பட்டாசு வெடித்தும் கோவில் திருவிழா போன்று கொண்டாடி மகிழ்ந்தனர்.


மேலும் சியான் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், பிரபு, பார்த்திபன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சோபிதா துலிபாலா, விக்ரம் பிரபு என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.


இந்நிலையில் இப்படமானது வெளியாகி பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில் இப்படம் குறித்து திரைப்பிரபலங்கள் உட்படப் பலரும் தங்களது கருத்துக்கள் மற்றும் விமர்சனங்களைத் தெரிவித்த வண்ணம் தான் இருக்கின்றனர்.


இதில் ரசிகர் ஒருவரினால் கூறப்பட்ட கருத்தானது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பேசப்பட்டு வருகின்றது. அதாவது "சோழர்கள் பனை மரத்தை இல்லாவிட்டாலும் அட்லீஸ்ட் ஒரு ஆலமரத்தை ஆவது பிடுங்கி சண்டை போட்டிருக்கலாம்" எனத் தெலுங்கு ரசிகர்கள் கூறுவதாக தமிழ் ரசிகர் ஒருவர் கிண்டலாக பதிவிட்டு இருக்கின்றார்.

மேலும் இப்படத்தில் நடிகர்கள் அனைவரும் ஆக்ஷன், கோபம், வீரம் போன்ற குணாம்சங்கள் யாவும் ஒருங்கிணைந்த தோற்றத்தில் கம்பீரமாக காட்சி அளிப்பதாலேயே இவர்கள் இவ்வாறான கமெடுண்டுகளை பதிவு செய்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

எது எவ்வாறாயினும் அவர்கள் கூறிய அந்தக் கருத்தானது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக மாறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement