• Sep 21 2024

அரைகுறை ஆடையில் திரியும் ஆர்யாவின் முன்னாள் காதலி... நல்ல வேளை நம்மாளு தப்பிட்டாரு போல... கிண்டலடிக்கும் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களை கொள்ளை கொண்ட ஒருவரே நடிகர் ஆர்யா. இவர் நடிகை சாயிஷாவை திருமணம் செய்வதற்கு முன் பிரபல தொலைக்காட்சி சேனல் ஒன்றில், குறிப்பாக சில வருடங்களுக்கு முன் தனக்கு மாப்பிள்ளை பார்க்கும் படியாக அமைந்த 'எங்க வீட்டு மாப்பிள்ளை' என்ற நிகழ்ச்சியை நடத்தியிருந்தார்.


இந்த நிகழ்ச்சியை நடிகை சங்கீதா தொகுத்து வழங்க 18 மாடல் பெண்கள் அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு போட்டி போட்டனர். அப்போட்டியாளர்களில் ஒருவரே சீதாலட்சுமி ஹரிஹரன்.


இவர் ஆர்யாவுக்காக கடுமையாக போட்டிப்போட்டு இறுதி சுற்று வரைக்கும் வந்த மூன்று பெண்களில் ஒருவராவர். அதுமட்டுமல்லாது இவர் ஒரு மலையாளப் பெண் என்பது குறிப்பிடத்தக்கது..

இந்நிலையில் மூன்று பேரையும் திருமணம் செய்யமாட்டேன் என்று சில காரணங்களை கூறி ஆர்யா தப்பித்துவிட்டார். இதற்கு சீதாலட்சுமி "ஆர்யா மீது அதிக ஆசையோடு பல கனவுகளுடன் வந்தேன்" என்று அந்த நிகழ்ச்சியில் வைத்துக் கூறி இருந்தார்.


இந்நிகழ்ச்சிக்கு பிறகு சீதாலட்சுமி மாடலிங் துறையில் அதிகளவு கவனம் செலுத்தியும் வருகிறார். தற்போது தாய்லாந்து சென்றுள்ள இவர் அங்கு படு கவர்ச்சியான அரைகுறை ஆடையணிந்து படுகிளாமரில் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.


இதற்கு ஆர்யா ரசிகர்கள் "நல்ல வேலை நம்ம ஆளு தப்பிட்டார்" என்று சொல்லி கிண்டலாக கமெண்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.

Advertisement

Advertisement