விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செல்லம்மா சீரியல் மூலம் ரசிகர்கள் மனதில் சித்துவாக இடம் பிடித்தவர் தான் அர்னவ். இவர் இதற்கு முதல் சன்டிவியில் பல சீரியல்களில் நடித்திருக்கின்றார். அந்த வகையில் கேளடி கண்மனி என்னும் சீரியலில் தன்னுடன் நடித்த திவ்யா ஸ்ரீதர் என்பவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார்.
தாங்கள் திருமணம் செய்து விட்டதாகவும் தான் கர்ப்பமாக இருப்பதாகவும் திவ்யா ஸ்ரீ கடந்த மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இதனை அடுத்து சில நாட்களிலேயே அர்னவ் தன்னை அடித்து சித்திரவதைப்படுத்துவதாகவும் தனது வயிற்றில் இருக்கும் கரு கலையும் அபாயம் ஏற்பட்டதாகவும் மருத்துவமனையில் இருந்தபடி வீடியோ ஒன்றினை வெளியிட்டிருந்தார்.
இதையடுத்து திவ்யாவின் குற்றச்சாட்டு அர்னவ் மறுப்பு தெரிவித்தார்.பின்னர் இருவரும் மாறி மாறி ஆடியோ ஆதாரங்களை வெளியிட்டு வந்தனர். இதையடுத்து திவ்யா கொடுத்த புகாரின் பேரில் அர்னவ் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போரூர் போலீசார் அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பி இருந்தனர். ஆனால் விசாரணைக்கு ஆஜராகாமல் டிமிக்கி கொடுத்து வந்த அர்னவ்வை கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்தனர்.
இதையடுத்து அவரை அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு அவருக்கு வருகிற அக்டோபர் 28-ந் தேதி வரை நீதிமன்ற காவல் விதித்து உத்தரவிடப்பட்டது. இதையடுத்து அர்னவ் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இது ஒருபுறம் இருக்க, தற்போது அர்னவ் மீது மலேசியாவை சேர்ந்த திருநங்கை ஒருவர் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.இதுகுறித்து திவ்யாவின் வழக்கறிஞரிடம் பேசியுள்ள அவர், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் தானும் அர்னவ்வும் நெருங்கி பழகி வந்ததாகவும், அப்போது எங்களிடையே சண்டை வந்தபோது அங்குள்ள மால் ஒன்றில் வைத்து அர்னவ் தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் அந்த சமயத்தில் அர்னவ் வேறு ஒரு பெண்ணுடனும் தொடர்பில் இருந்ததாக அந்த திருநங்கை அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!