• May 05 2024

ரவுடிகளுடன் வந்து மிரட்டி.. என் குழந்தையை அர்ணவ் கொல்லப் பாக்கிறாரு... கதறி அழுத திவ்யா...!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

சமீபகாலமாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வந்த விடயம் என்றால் அது திவ்யா-அர்ணவ் கதை தான். அதாவது 'செவ்வந்தி' சீரியில் கதாநாயகியாக கலக்கிக் கொண்டிருந்த திவ்யா அதே சீரியலில் தனக்கு துணையாக நடித்த அர்ணவ் என்ற இஸ்லாமிய நடிகரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.  இருப்பினும் காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் சில நாட்களிலேயே பிரிந்து விட்டனர்.


இன்றுவரை இவர்கள் தனித்தனியாகவே வாழ்ந்து வருகின்றனர். அத்தோடு திவ்யாக்கு பெண் குழந்தை ஒன்றும் பிறந்துள்ளது. மேலும் இவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் பல புகார்களை முன்வைத்தும் வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் அர்ணவ் தனது வழக்கறிஞர்கள் மற்றும் பவுன்சர்களுடன் திருவேற்காட்டில் உள்ள திவ்யாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு வந்த அவர்களை கதவைத் திறந்து உள்ளே விட திவ்யா அனுமதிக்கவில்லை. இதனையடுத்து இவர்கள் இருவருக்கும் இடையே பலத்த வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 


இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் திவ்யா மற்றும் அர்ணவ்விடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அந்தவகையில் அர்ணவ் "திவ்யா இருக்கும் வீடு தனது பெயரில் இருப்பதாகவும், திவ்யாஅந்த வீட்டில் அத்துமீறி தங்கியிருப்பதாகவும்" கூறி இருக்கின்றார். 

அத்தோடு அர்ணவ் நிபந்தனை ஜாமீனில் இருப்பதால் இந்த வீட்டிற்கு வரக்கூடாது என்று திவ்யா கூறியதாக அவரது தரப்பு வழக்கறிஞர் கூறியுள்ளார். இதனையடுத்து இருவரையும் ஆதாரங்களை சமர்பிக்குமாறு போலீசார் கூறியுள்ளனர்.


பின்னர் திவ்யா செய்தியாளர்களிடம் பேசுகையில் "அர்ணவ் 13 ரௌடிகளுடன் வந்து என்னுடைய வீட்டு கதவை தட்டினார். நான் அவரை வீட்டிற்குள் அனுமதிக்காததால், இது என் வீடு என்று கூறி வீட்டுக் கதவை வேகமாக தள்ளினார்கள். இதனைத் தொடர்ந்து நான் உடனே கதவை மூடிவிட்டு என்னுடைய வழக்கறிஞரை தொடர்பு கொண்டு நடந்த விஷயத்தை சொன்னேன். அதுமட்டுமல்லாது போலீசாருக்கும் தகவல் தெரிவித்தேன்" என்றார்.

மேலும் அவர் கூறுகையில் "அர்ணவ்வால் எந்த பெண்ணும் இனி ஏமாறக்கூடாது என்று தான் ஆடியோவை வெளியிட்டேனே தவிர வேறு எந்த தனிப்பட்ட ரீதியிலான உள்நோக்கமும் இல்லை. ஆனால் இப்போது அவர் என் வீட்டுக்கே வந்து என்னுடைய குழந்தையை கொல்லப்பார்க்கிறார். இது அவர் வீடு என்பதால், அதை காலி செய்ய வேண்டும் என்று மிரட்டுகிறார்" என்று கதறி அழுது கண்கலங்கியபடி திவ்யா தெரிவித்துள்ளார்.

இவர்கள் குறித்த இந்த விடயமானது தற்போது சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement