• May 19 2024

தமிழை பழி தீர்க்க அர்ஜுன் போட்ட புது பிளான்-சரஸ்வதி குடும்பத்தினருக்கு அபி சொன்ன முக்கிய விடயம்- கோதை கண்ட கெட்ட கனவு- Thamizhum Saraswathiyum Serial

stella / 7 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் தமிழும் சரஸ்வதியும். அந்த வகையில் இந்த சீரியலில் இன்றைய தினம் என்ன நடக்கவுள்ளது என்று பார்ப்போம்.

தமிழின் மாமா பரமு, தொழிலாளி ஒருவரை அடித்ததால் அர்ஜுன் அவர்களிடம் மன்னிப்புக் கேட்கும் படி சொல்கின்றார். அப்போது பரமுவும் மன்னிப்புக் கேட்க அவர்கள் மன்னிப்புக் கேட்டால் மட்டும் போதாது நாங்களும் பரமுவை அடிக்கனும். அவர் எங்களை மரியாதைக் குறைவாக நடத்தினாரு என்று சொல்கின்றார்கள்.


இதைக் கேட்ட அர்ஜுன் கடுப்பாகி அப்படி எல்லாம் மன்னிப்புக் கேட்க முடியாது என்று சொல்லி அவர்களைத் திட்ட அவர்கள் இனிமேல் இந்த கம்பனியில் எங்களால வேலை செய்ய முடியாது என்று சொல்லிவிட்டுச் செல்கின்றனர். தொடர்ந்து அவர்கள் தமிழ் கம்பெனிக்கு சென்று வேலை கேட்க கார்த்திக் இங்க உங்களுக்கு வேலை கிடைக்காது.

ஏற்கனவே இங்க நிறைய பிரச்சினை போய்ட்டு இருக்கு இந்த நேரத்தில,நீங்களும் வந்தால் ஏதாவது பிரச்சினை ஆகிடும் என்று சொல்ல தமிழ் வந்து என்ன பிரச்சினை ஆனாலும் பரவாயில்லை. இவங்க இங்கையே வேலை செய்யட்டும். இவங்க எல்லோருமே ரொம்ப அனுபவம் நிறைஞ்சவங்க. இப்படிப்பட்டவங்கள வேலைக்கு சேர்க்கிறது நம்ப கம்பெனிக்கு தான் நல்லம் என்கின்றார்.


இதனை அடுத்து பரமு வந்து நம்ம கம்பெனில இருந்து வெளில போனவங்க தமிழ் கம்பெனிக்கு போய்ட்டாங்க என்று சொல்ல, அர்ஜுனும் நாம சும்மா நம்ம வேலையைப் பார்த்திட்டு இருக்கிறோம். அந்த தமிழ் சேர் எதுக்காக இப்படிப் பண்ணிட்டு இருக்காரு என்று தெரியலையே என்று தமிழ் மீது பழி போட்டு பேச ராகினியும் தமிழ் மீது தப்பு இருக்கு என்று யோசிக்கின்றார்.

பின்னர் வெளியில் நின்று அர்ஜுனும் அவரது மாமாவும் தமிழை ஏதாவது செய்யனும் சும்மா விடக்கூடாது என்று பிளான் போடுகின்றனர். அந்த வழியாக அபியைக் கண்டதும் இந்தப் பேச்சை அப்படியே நிறுத்துகின்றனர். மறுபுறம் அர்ஜுன் கம்பெனியில் இருந்து தங்களுடைய கம்பெனிக்கு வந்தவர்களை சேர்க்கலாமா வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்க தமிழ் அதெல்லாம் குழம்ப வேணாம் சேர்த்துக்கலாம் என்கின்றார்.



அப்போது அபி போன் பண்ணி நடந்த விஷயம் எல்லாத்தையும் சொல்கின்றார்.அத்தோடு அர்ஜுன் மீண்டும் ஏதோ பிளான் போடுறான் என்று சொல்ல தமிழ் அவன் என்ன செய்யிறான் என்று பார்த்துக்கலாம் என்கின்றார். தொடர்ந்து எல்லோரும் துாங்கிய பின்பு கோதை வாழை மரம் எரிகின்றது என வசு கத்துவதைப் போல கனவு காண்கின்றார். இதனால் திடுக்கிட்டு எழும்பி வெளியே வருகின்றார். அங்கே தமிழும் துாங்காமல் இருக்கின்றார். இத்துடன் இன்றைய எப்பிஷோட் முடிவடைவதைக் காணலாம்.


Advertisement

Advertisement